Friday 28 February 2014

, , , ,

வென்சர் கேப்பிடல் (Venture Capital) / துணிகர முதலீடு என்றால் என்ன?

எந்த ஒரு தொழில் ஆரம்பிக்கும் போதும் அதற்கான முதலீடு பல வழிகளில் திரட்டப் படுகிறதுபொதுவாக ஏற்கனவே வெற்றி பெற்ற ஒரு தொழிலை தொடங்கும் போது அதனுடைய சாதக பாதகங்கள் ஏற்கனவே பரிச்சயமாகியிருக்கும்அதனால் முதலீடு போடுபவர்கள் அவற்றை கருத்தில் கொள்வார்கள்ஆனால் புதிதாக, சந்தையில் பரிச்சயமில்லாத, ஒரு தொழிலை தொடங்கும் போது அதற்க்கான முதலீட்டை பெறுவது அவ்வளவு சுலபமில்லைஇதற்க்கான தீர்வுதான் வென்சர் கேப்பிடல் (Venture Capital) அதாவது துணிகர முதலீடு.

வென்சர் கேப்பிடல் என்று சொல்லப்படும் நிறுவனங்கள் போதுவாக புதிய, சந்தைக்கு பரிச்சயமில்லாத தொழில்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.  அவர்கள் உங்கள் தொழிலின் தன்மை, நீங்கள் அதற்க்காக போட்டிருக்கும் திட்டங்கள், லாப கணக்குகள் ஆகியவற்றை அலசி, உங்கள் தொழில் லாபம் ஈட்டும் என்று தெரிந்தால் மட்டுமே முதலீடு செய்வார்கள்இதன் மூலம் நீங்களும் உங்கள் தொழிலை கவனமாக ஆரம்பிக்கலாம்

வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள், தொழில் அதிபர்கள், மேலாண்மை நிபுணர்கள், தொழில் நுட்ப நிபுணர்கள் ஆகியவற்றை கொண்டு இருக்கும்இதனால் அவர்களின் அனுபவமும் அறிவும் உங்கள் தொழிலுக்கு உதவியாக இருக்கும்அவர்கள் உங்களின் தொழிலின் ஒவ்வொரு படியிலும் தங்களது ஆலோசனைகளை வழங்குவார்கள்

இந்த முதலீடுகள் பல கட்டங்களில் நடைபெறும்ஆரம்ப முதலீடு, சிறிது வளர்ச்சி அடைந்த பிறகு முதலீடு பின்பு தொழிலின் அடுத்த நிலைக்கு முன்னேறுவதற்க்கான முதலீடு என பல கட்டங்களாக நடைபெறும்.

இந்நிறுவனங்கள் உங்களின் தொழிலின் பங்கு தாரர்களாக இருப்பார்கள். இந்த பங்குகள் மூலம் அவர்கள் தங்கள் லாபத்தை எடுத்துக் கொள்வார்கள்.  எப்போது உங்கள் தொழில் தன்னிச்சையாக முதலீடுகளை செய்ய முடிகிறதோ அப்போது அவர்கள் நிறுவன பங்குகளை விற்று விலகிக் கொள்வார்கள்.


குறிப்பு: இந்த கட்டுரை வென்சர் கேப்பிடல் பற்றிய ஒரு அறிமுகமே.  இது பற்றி அதிக தகவல்கள் பெற சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது நிபுணர்களை அணுகவும். 

Tuesday 25 February 2014

, , , , , ,

அமேசானில் (Amazon) ஆன்லைனில் உங்கள் பொருள்களை விற்பது எப்படி?

இணையதளம் உலகத்தை சுருக்கி இருந்தாலும் அது ஒரு வகையில் உலகளாவிய வாய்ப்புகளை பரந்து விரிய விட்டிருக்கிறது.  தொழில் முனைவோர் தங்கள் தொழில்களை பல நாடுகளுக்கு கொண்டு சென்று தங்கள் வருமானத்தை பெருக்குகின்றனர்.  அப்படி உங்களுக்கு உதவுவதற்க்காகவே அமேசான் அளிக்கும் இந்த சிறப்பு சேவை மூலம் நீங்கள் இந்தியா முழுவதும் உங்கள் பொருள்களை விற்க வாய்ப்பளிக்கிறது. 



முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் பொருள்களை அமேசானில் பட்டியலிடுங்கள்.  அதற்க்காக வடிவமைக்கப்பட்ட இணையதள கருவிகள், மென்பொருள்கள் மூலம் நீங்கள் உங்கள் பொருள்களை பட்டியலிடலாம்.

வாடிக்கையாளர்கள் அமேசானில் உங்கள் பொருள்களை காண்பார்கள்.  அவர்களுக்கு தேவையான பொருள்களை அதற்க்கான பணத்தை செலுத்தி ஆன்லைனிலே ஆர்டர் செய்வார்கள்.  சிலர் பணம் செலுத்திய பிறகு பொருளை வாங்கும் விருப்பத்தையும் தேர்ந்து எடுக்கலாம். அமேசான் அவர்கள் ஆர்டர் செய்த பொருள்களின் பட்டியலை உங்கள் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள்.

நீங்கள் அந்த பொருள்களை வாடிக்கையாளர்களின் முகவரிக்கு அனுப்பி வைத்த பிறகு, அமேசான் அதற்கான விலையை (அவர்களின் தரகு கழித்து) உங்கள் வங்கி கணக்கில் சேர்த்து விடுவார்கள்.

கட்டணங்கள்

அமேசானில் உங்கள் பொருள்களை பட்டியலிடுவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.  அவர்கள் தரகு மட்டும் வசூலிக்கிறார்கள்.  மாதசந்தாவாக ரூபாய் 499 வசூலிக்கப்படுகிறது.  மேலும் ஒவ்வோரு பொருள் விற்று முடியும் போது ரூபாய் 10 வசூலிக்கப்படுகிறது.  தரகு கட்டணம் 5% லிருந்து 15% வரை பொருள்களுக்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது.  குறிப்பாக புத்தகங்களுக்கு மின்னனு பொருள்களுக்கு 12% ம், மொபைல் போன்களுக்கு, கணிணிகளுக்கு 5% ம், குழந்தைகளுக்கான பொருள்கள், நகைகள் மற்றும் வீட்டுப் பொருள்களுக்கு 15% ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.  தரகுக்கு 12..36% சேவை வரியும் உண்டு.  தரகு கட்டணம், வாடிக்கையாளர் செலுத்தும் பணத்தின் மதிப்பில் கணக்கிடப்படுகிறது.  இதில் டெலிவரி சார்ஜ் மற்றும் வரிகளும் அடங்கும்.

குறிப்பு: முதல் வருடத்திற்க்கு சந்தா மற்றும் தரகுகளில் தள்ளுபடி ஆகியவை உண்டு, இரண்டாண்டுகள் ஒப்பந்த அடிப்படையில். மேலும் விபரங்களுக்கு >இங்கே< கிளிக் செய்து அமேசான் தளத்திற்க்கு சென்று தெரிந்துக் கொள்ளவும்.

Friday 21 February 2014

, , ,

சித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம்

மருத்துவப் படிப்புகள் இல்லாத காலத்திலேயே நம் சித்தர்கள் நமக்கு வரும் நோய்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு இயற்கை முறையில் சரி செய்து கொள்வது பற்றியும் ஓலைச் சுவடிகளில் பதிந்து விட்டு போயிருக்கிறார்கள்.  ஆங்கில ஆதிக்கம் நமது பாரம்பரியத்தில் ஏற்படுத்திய தாக்கத்தில் அழிந்து போன அல்லது அழிந்துக் கொண்டு வரும் மற்றைவையில் நமது சித்த வைத்தியமும் அடங்கும்.

எதற்கு எடுத்தாலும் நாம் ஆங்கில மருத்துவமனைகளுக்கு ஓடுவது, நமது பாட்டி வைத்தியம் எனப்படும் கை வைத்தியம் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்து செல்லாததால் வந்த நிலைமை.  அவ்வகையில் டாக்டர். அருண் சின்னையா அவர்கள் எழுதிய ‘சித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம்’ என்ற புத்தகம் மனித உடலில் இருக்கும் ஒன்பது மண்டலங்கள், ஏற்படும் நோய்கள், அந்த நோய்களுக்கான இயற்கையான எளிதாக மூலிகை மருந்துகள் பற்றியிம் தெளிவாக விளக்குகிறது.

அம்மருந்துகளை எப்படி சாப்பிடுவது, சாப்பிடும் கால அளவு, அவ்வாறு முறைப்படி சாப்பிட்டால் எவ்வளவு நாளில் நோய்கள் குணமாகும் என்பது பற்றியும் விளக்கியிருக்கிறார்.  இது ஒரு எளிமையான முழுமையான மற்றும் ஒவ்வோரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்.

ஆசிரியரைப் பற்றி
நூலாசிரியர் டாக்டர் அருண் சின்னையா, மாற்றுமுறை மருத்துவத்தில் எம்.டி. பட்டமும், இயற்கை மருத்துவத்தில் டிப்ளமோ சான்றிதழும் பெற்றவர். மருத்துவப் பணியிலும், மருந்துகள் செய்முறையிலும் பத்து ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சென்னையில் உள்ள தன்னுடைய ஆதவன் இயற்கை மருத்துவ ஆய்வு மையத்தின் மூலம் ஆண்மைக் குறைவு, ஆஸ்துமா, நீரிழிவு நோய், உடல் பருமன், மாதவிலக்குக் கோளாறுகள் போன்றவற்றுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து வருகிறார். 


புத்தகத்தைப் பற்றி 
  • பெயர்: சித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம்
  • ஆசிரியர்: டாக்டர் அருண் சின்னையா
  • பக்கங்கள்: 200 பக்கங்கள்
  • பதிப்பாளர்: நலம்
  • விலை: Rs.200/- (வாங்க விருப்பம் உள்ளவர்கள் மேலே உள்ள லிங்கைப் கிளிக் செய்து புத்தகத்தை வாங்கி கொள்ளலாம்)
குறிப்பு: புத்தகம் வேண்டுவோர் மேலே உள்ள லிங்கை பயன்படுத்தி வாங்கலாம் அல்லது இங்கே கிளிக் செய்து படிவத்தை நிரப்பியும் பெறலாம்.

Wednesday 19 February 2014

, , , , ,

மார்க்கெட்டிங் மாயாஜாலம்

தொழில்களையும் மார்க்கெட்டிங் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சந்தைப்படுத்துதலையும் என்றும் பிரிக்க முடியாது.  உங்களிடம் மிகச் சிறந்த தொழில் ஐடியா இருக்கலாம், அந்த தொழிலை ஆரம்பிக்க அதிக பணம் இருக்கலாம், ஆனால் உங்களிடம் உங்கள் பொருளையே சேவையையோ மக்களிடம் சென்று சேர்க்காத வரை நீங்கள் தொழிலில் இலாபம் ஈட்ட முடியாது.  மிகவும் சிறிய அளவில் ஆரம்பிக்கப்படும் பல தொழில்கள் அதிகமாக இலாபம் ஈட்டுவது இந்த மார்க்கெட்டிங் உத்திகளை பயன்படுத்திதான். 


சந்தையில் போட்டியாளர்களை சமாளித்து மக்களிடம் நம் பொருள்களை எப்படி சேர்த்து அதிக இலாபம் ஈட்டுவது என்பது பற்றி சதீஷ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ‘மார்க்கெட்டிங் மாயாஜாலம்’ என்ற புத்தகத்தில் மிகவும் தெளிவாக விளக்கியிருக்கிறார்.  நீங்கள் சிறுதொழில் நிறுவனராய் இருந்தாலும், மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிவோரானாலும், ஏதேனும் விதத்தில் நீங்கள் தொழிலில் சம்பந்தப் பட்டவரானாலும் இந்த புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  பெரும்பாலான மார்க்கெட்டிங் புத்தகங்கள் ஆங்கிலத்திலேயே வெளிவந்துள்ளன.  அனைவரும் எளிதில் புரிந்துக் கொள்ளும் படியாக எளிய தமிழில் இந்த புத்தகம் இருக்கிறது.  

ஆசிரியரைப் பற்றி
இப்புத்தகத்தின் ஆசிரியர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா டெம்பிள் யுனிவர்சிடியில் எம்.பி.ஏ. படித்துள்ளவர்.  மெக்கான் எரிக்சன், முத்ரா போன்ற விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்தவர்.  கவின்கேர், கிரிக்கின்ஃபோ போன்ற நிறுவனங்களில் மார்க்கெட்டிங் துறையில் மேலாளராகப் பணிபுரிந்தவர். தற்போது பல தமிழக நிறுவனங்களுக்கு மார்க்கெட்டிங் ஆலோசகராகப் பணிபுரிகிறார். அத்துடன் IIPM சென்னை, ITM சென்னை, அம்ரிதா ஸ்கூல் ஆஃப் பிசினஸ், கோவை ஆகிய நிர்வாகவியல் கல்லூரிகளில் மார்க்கெட்டிங் துறையில் பாடங்கள் நடத்துகிறார். 


புத்தகத்தைப் பற்றி
  • பெயர்: மார்க்கெட்டிங் மாயாஜாலம்
  • ஆசிரியர்: சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
  • பக்கங்கள்: 100 பக்கங்கள்
  • விலை: Rs.100/- (டெலிவரி சார்ஜ் தனி) (மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கலாம்)

குறிப்பு: புத்தகம் வேண்டுவோர் மேலே உள்ள லிங்கை பயன்படுத்தி வாங்கலாம் அல்லது இங்கே கிளிக் செய்து படிவத்தை நிரப்பியும் பெறலாம்.

Monday 17 February 2014

, , ,

சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்

நெப்போலியன் ஹில் அவர்கள் எழுதி 1937 ஆம் ஆண்டு வெளிவந்து சுமார் 7 கோடிகளுக்கும் அதிகமாக விற்பனையாகிய ’Think and Grow Rich’ என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கமே ‘சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்’.

இந்த புத்தகத்தில் நெப்போலியன் ஹில், வாழ்க்கையில் எந்த நிலையில் என்ன வேலையில் உள்ளவர்களும் பணக்காரர்கள் ஆவதற்க்கான தத்துவத்தை எடுத்துரைக்கிறார்.  சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக ஆய்வுகள் செய்து, வாழ்க்கையில் வெற்றி பெற்று பணக்காரர்கள் ஆன அவரின் நெருங்கிய நண்பர்களின் வெற்றியின் இரகசியங்களை எழுதியிருக்கிறார்.

நீங்கள் எப்படி 13 வழிகளை பின்பற்றி பணக்காரர்கள் ஆகலாம் என்பது பற்றி ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.  இந்த புத்தகத்தின் மூலம் கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் பலர்.  இந்த புத்தகம் பணக்காரர் ஆனவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது.  உலகிலுள்ள கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்றாக இப்புத்தகம் பரிந்துரைக்க பட்டிருக்கிறது.

ஆசிரியரைப் பற்றி
நெப்போலியன் ஹில் 1883 ஆம் ஆண்டு பிறந்த அமெரிக்க எழுத்தாளர்.  இவர் தம் வாழ் நாளில் பல பணக்காரர்களுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார்.  அவ்வாறு தாம் கற்ற மற்றும் தாம் பின்பற்றிய வழிகளையே இந்த புத்தகத்தில் அவர் எழுதியிருக்கிறார்.  அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர் அன்ரூ கார்னகி அவரின் உந்துதலின் பேரில் இந்த புத்தகத்தை எழுதினார்.  சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட வெற்றி பெற்றவர்களை பேட்டி கண்டு இந்த புத்தகம் எழுதப்பட்டது.  அவர்களில் பலர் கோடீஸ்வரர்கள்.

புத்தகத்தைப் பற்றி
  • பெயர்: சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்
  • ஆசிரியர்: நெப்போலியன் ஹில்
  • பக்கங்கள்: 320 பக்கங்கள்
  • விலை: Rs.123/- 

இடைக்கால பட்ஜெட் 2014 – முக்கிய அம்சங்கள்

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த 2014-15 க்கான இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:


  • சிறிய வகை கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் ஆகியவற்றுக்கு சுங்கவரி 12% லிருந்து 8% ஆக குறைக்கப் பட்டுள்ளது.
  • நடுத்தர வகை வாகனங்களுக்கான சுங்கவரி 24% லிருந்து 20% ஆக குறைக்கப் பட்டுள்ளது.
  • பெரிய வகை வாகனங்களுக்கான சுங்கவரி 27% லிருந்து 24% ஆக குறைக்கப் பட்டுள்ளது.
  • SUV வகை வாகனங்களுக்கான சுங்கவரி 30% லிருந்து 24% ஆக குறைக்கப் பட்டுள்ளது.

இதனால் மேற்படி கூறப்பட்ட வாகனங்களின் விலை குறையலாம்.
  • உள்நாட்டில் தயாராகும் மொபைல் போன்களுக்கான சுங்கவரியும் குறைக்கப் பட்டுள்ளது.
  • பட்ஜெட்டின் மிக முக்கிய அம்சமாக அரிசிக்கான சேவை வரி நீக்கப் பட்டுள்ளது.  மேலும் இரத்த வங்கிகளுக்கான சேவை வரியும் நீக்கப் பட்டுள்ளது.  
நன்றி: Flickr-Tax Credits

Sunday 16 February 2014

, , , ,

பணவீக்கம் என்றால் என்ன?

பணவீக்கம் என்பது நாம் வாங்கும் பொருள்கள் மற்றும் நமக்கு அளிக்கப் படும் சேவைகளின் ஆண்டுக்கு ஆண்டு ஏறும் விலையேற்றம். இது விகிதத்தில் கணக்கிடப் படுகிறது.  உதாரணமாக ஒரு தொலைக்காட்சி பெட்டியின் விலை தற்போது Rs.12000/- என்றால், ஆண்டிற்க்கு 9% என்ற சதவீகத்தில் அதன் விலை ஐந்தாண்டுகளுக்கு பிறகு Rs.18463/- என்றிருக்கும். இதுதான் பணவீக்கம் எனப்படுகிறது.


பணவீக்கம் நாணயத்தின் வாங்கும் சக்தியை குறைக்கிறது.  பணவீக்கம் விலை குறியீட்டெண் அடிப்படையில் நிர்ணயம் செய்யப் படுகிறது.  இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பணவீக்கம் பொதுவாக அதிகமாக காணப்படும்.  ஆனால் மிக அதிக பணவீக்கம் பொருளாதாரத்தை பாதிக்கும்.


பொதுவாக பணவீக்கம் அதிக ஏற்றமும் அதிக இறக்கமும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் இருப்பது நலம்.  தேவையான அளவிற்க்குள் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் கடமை மத்திய வங்கியை சார்ந்தது.  பணவீக்கம் தேவை மற்றும் வழுங்கல் போன்ற காரணிகளால் மாற்றம் அடைகிறது.

Saturday 15 February 2014

, , ,

நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி?

மனிதர்களாகிய நாம் ஒரு சமூக விலங்காக கருதப்படுகிறோம்.  இதன் அர்த்தம் நாம் தனியாக இந்த உலகத்தில் வாழ்க்கை நடத்த முடியாது.  நாம் பல மனிதர்களுடன் பழக வேண்டியுள்ளது.  அவ்வாறு பழகும் போது நாம் பல குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களை சந்திக்க வேண்டியுள்ளது.  அவர்களை நாம் நம் நண்பர்களாக்கி கொள்வது அவசியம்.  ஆனால் ஒருவரை நாம் நண்பராக்கி கொள்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
நீங்கள் பார்க்கும் அல்லது பழகும் அனைவரையும் நண்பர்களாக்கி கொள்ளவும், மக்களிடம் செல்வாக்குடன் விளங்கவும், உங்கள் தொழில், தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றில் சிறந்து விளங்கவும் டேல் கார்னகி ஆங்கிலத்தில் எழுதிய ‘How to Win Friends and Influence People?’ என்ற புத்தகம் ‘நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி?’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தை படிப்பவர்கள் அவர்களின் மனைவி, கணவர், குழந்தைகள், முதலாளி, தொழிலாளி, நண்பர்கள் மற்றும் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை எளிதாக கையாளலாம்.  அவர்களிடம் செல்வாக்கு பெறலாம்.  வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

குறிப்பு: இந்த புத்தகம் சுமார் 1 கோடிகளுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளது.

ஆசிரியரைப் பற்றி:
டேல் கார்னகி 1888 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த ஆசிரியர் மற்றும் எழுத்தாளர்.  அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.  அவர் எழுதிய புத்தகங்கள் பலவும் இன்றும் மக்களால் விரும்பி படிக்க படுகிறது.

புத்தகத்தைப் பற்றி:
  • பெயர்: நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி?
  • எழுத்தாளர்: டேல் கார்னகி
  • பக்கங்கள்: 394 பக்கங்கள்
  • விலை: Rs.175/- 

Wednesday 12 February 2014

, , ,

என் சீஸை நகர்த்தியது யார்?

மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் எப்படி உங்களை மாற்றி கொள்ள வேண்டும் என்பது பற்றி டாக்டர் ஸ்பென்சர் ஜான்சன் ஆங்கிலத்தில் எழுதிய ‘Who Moved My Cheese?’ தமிழில் ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது.  இந்த புத்தகம் உலகம் முழுவதும் சுமார் ஒரு கோடி காப்பிகளுக்கு மேல் 37 மொழிகளில் விற்பனையாகி உ:ள்ளது.  இது ஒரு சிறப்பான புத்தகங்களில் ஒன்றாக கருதப் படுகிறது.


இது ஒரு கதை வடிவில் நான்கு பேர்களின் (இரண்டு எலிகள் மற்றும் இரண்டு சிறிய மனிதர்கள்) வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை பற்றியும் அவர்கள் அவற்றை எவ்வாறு எதிர் கொள்கிறார்கள் என்பது பற்றியும் மிகவும் சுவாரசியமாக சொல்லப் பட்டிருக்கிறது.

காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப நீங்கள் உங்கள் வேலை, தனிப்பட்ட வாழ்க்கை, பணம், உடல் நலம் மற்றும் அமைதியான மனநிலை ஆகியவற்றை எவ்வாறு உங்களின் வளர்ச்சிக்காக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி அழகாக சொல்லப் பட்டிருக்கிறது.  இந்த புத்தகத்தின் மூலம் நீங்கள் உங்கள் வாழ்வில் முன்னேருவதற்க்கான வழிகளை பெறுவீர்கள். 

புத்தகத்தின் குறிப்புகள்

புத்தகத்தின் பெயர்: என் சீஸை நகர்த்தியது யார்?
எழுத்தாளர்: டாக்டர். ஸ்பென்சர் ஜான்சன்
பக்கங்கள்: 100 பக்கங்கள்

குறிப்பு: இந்த புத்தகத்தின் அடக்க விலை Rs.150/-. ஆனால் கீழே உள்ள லிங்க் மூலமாக இந்த புத்தகத்தை Rs.100/- க்கு வாங்கிக் கொள்ளலாம் டெலிவரி சார்ஜ் இலவசம்.

Saturday 8 February 2014

2034?


நமக்கு வியாழன் சூரிய குடும்பத்தில் இருக்கும் மிக பெரிய கிரகம் என்று தெரியும்.  அது  83 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமிக்கு அருகே வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.   இதற்கு முன்,  அது 1954 ஆம் ஆண்டில் பூமிக்கு அருகில் வந்ததாக கூறப்படுகிறது.   இது அந்த நேரத்தில் பூமியில் இருந்து சுமார் 59 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.   அது மீண்டும் 2034 இல் பூமிக்கு அருகே வரும் என்று நம்பப்படுகிறது!  அதற்கு நீங்கள் தயாரா?


Tuesday 4 February 2014

அச்சச்சோ! நான் மீண்டும் அதை செய்து விட்டேன்

அச்சச்சோ! நான் மீண்டும் அதை செய்து விட்டேன்.   நான் அதை செய்திருக்க கூடாது.   நான் என் கட்டுப்பாட்டை இழந்திருக்க கூடாது.   நான் அதை மீண்டும் செய்வேன் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை.   நான் இந்த ஆண்டு தான் அந்த தீர்மானத்தை எடுத்தேன்.   இது ஒரு கெட்ட பழக்கம்.   நான் என்னுடைய தீர்மானத்தை கடைப்பிடிப்பேன் என்றுதான் நினைத்தேன்.   நான் ஒவ்வொரு ஆண்டும் தீர்மானங்களை எடுக்கிறேன்.   ஆனால் பிரச்சனை என்னவென்றால் ஒவ்வொரு ஆண்டும் அதே தீர்மானங்களையே எடுக்க வேண்டியுள்ளது. 

நான் இன்னும் கவனமாக இருந்திருக்க கூடும். ஆனால், ஏதோ எனக்கு ஆசை. நான் மிகவும் நிலையாக இருந்தும் கூட, அது நடந்தது விட்டது. நான் என் நிலையை இழந்தது எப்படி என்று தெரியவில்லை. யாரோ அந்த நிலையில் என்னை பார்த்திருப்பார்கள் என்று அச்சப்படுகிறேன். ஆண்கள் மட்டுமல்லாமல் சில பெண்கள் கூட என்னை அந்த நிலையில் பார்த்து இருப்பார்கள். நான் மிகவும் வெட்கப்படுகிறேன். நிச்சயமாக அனைவரும் அதை இரவுதான் செய்வார்கள். ஆனால் காலையிலேயே, நான் அதை செய்து விட்டேன்.  நான் அடுத்து என்ன செய்ய முடியும்? ஆமாம்! நான் மீண்டும் அலுவலகத்தில் தூங்கி விட்டேன்.