Monday 26 May 2014

உலக கால்பந்து போட்டி: தகவல்கள்-1

இன்னும் சில வாரங்களில் தொடங்க போகும் உலக கால்பந்து போட்டியை உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.  உலக கால்பந்து போட்டி, பெடரேஷன் இன்டர்னேஷனல் தி புட்பால் அசோசியேஷன் என்ற அமைப்பின் மூலம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப் படுகிறது.  இது இப்போது கால்பந்து ஆட்டத்திற்க்கு பெயர்போன பிரேசிலில் ஜுன் மாதம் 13 ஆம் தேதி தொடங்குகிறது.  உலக கால்பந்து போட்டி பற்றிய சில தகவல்களை தொடர்ந்து இந்த ‘தமிழ் இதழ்’ லில் காணலாம்.


முதல் உலக கால்பந்து போட்டி நடைப்பெற்ற ஆண்டு 1930.  இந்த போட்டி உருகுவே நாட்டில் நடத்தப்பட்டது.  மொத்தம் 13 நாடுகள் மட்டுமே பங்கேற்றன.  இதில் வெற்றி பெற்றதும் உருகுவே நாடுதான்.  முதல் போட்டி உருகுவேவில் நடத்தப் பட்டதற்க்கான காரணம், அப்போது 1924 மற்றும் 1928 ஆண்டுகளில் உருகுவே ஒலிம்பிக்கில் கால்பந்து போட்டியில் தங்க பதக்கங்களை வென்றிருந்தது. மேலும் அது தனது 100 வது சுதந்திரதினத்தை 1930 ஆம் ஆண்டு கொண்டாட இருந்தது.  இதனால் முதல் உலக கால்பந்து போட்டி உருகுவேவில் நடத்துவது என்பது தீர்மானமானது.

ஆனால் உருகுவே நாடு, தென் அமெரிக்காவில் இருந்ததால் பல ஐரோப்பிய நாடுகளுக்கு அப்போதைக்கு இருந்த போக்குவரத்தின் வசதி குறைவு காரணமாக இந்த போட்டியில் பங்கேற்க முடியவில்லை.  இதனால் மெத்தம் 13 நாடுகள் மட்டுமே பங்கு கொண்டன.

அதன் பிறகு 1934 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைப்பெற்ற உலக கால்பந்து போட்டியில் உருகுவே பங்கேற்கவில்லை.  உருகுவே ஐரோப்பிய நாடுகளுக்கு பதிலடியாக இந்த முடிவை எடுத்தது.  ஆனால் இதற்கு உருகுவே பணப்பற்றாகுறையை காரணமாக சொன்னாலும், ஐரோப்பிய நாடுகள் 1930 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் கலந்து கொள்ளாததே முதற் காரணமாக பட்டது.

இதனால் வெற்றி பெற்ற அணி அடுத்த போட்டியில் பதக்கத்தை தக்க வைக்க கலந்து கொள்ளாத முதல் மற்றும் கடைசி நாடாக உருகுவே வரலாற்றில் இடம் பெற்றது.

Image Courtesy: Wikipedia

Wednesday 14 May 2014

, , , , ,

மேரிகார்.காம் (MeriCAR.com) உங்களை பணம் சம்பாதிக்க அழைக்கிறது

இந்தியாவில் தனிநபர் வருமானம் அதிகரித்திருப்பதால் இன்று ஒவ்வொரு வீட்டின் முற்றத்திலும் நீங்கள் கார்களை பார்க்கலாம்.  குறைந்த பட்சம் ஒரு சிறிய காரையாவது ஒவ்வொருவரும் வாங்க ஆசை படுகின்றர்.  இதனால் இன்று கார்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு போகிறது. கார் வைத்திருப்பவர்கள் அவற்றை பராமரிப்பதற்க்கு சிரம பட வேண்டியிருக்கிறது.  இதற்கு காரணம் அவர்களால் சரியான பாரமரிப்பு நிலையத்தை கண்டறிய முடிவதில்லை.  அதற்கு அவர்களுக்கு நேரமும் போதவில்லை.  இதனால் கார்களின் தரம் நாளுக்கு நாள் பாதிப்படைகிறது.  இதற்கு தீர்வாக வந்திருப்பதுதான் மேரிகார்.காம் (MeriCAR.com).


மேரிகார்.காம் டில்லியை தலைமையிடமாக கொண்ட கார் வொர்க் ஷாப்ஸ் மற்றும் கார்களை பராமரிக்கும் நிலையங்களை தனது தகவல் பெட்டகத்தில் வைத்திருக்கும் ஒரு வணிக இணையதளம்.  இதன் மூலம் உங்கள் கார்களை பராமரிக்க பராமரிப்பு நிலையங்களை உங்கள் ஊரிலேயே எளிதில் கண்டறியலாம்.  மேலும் இதன் மூலம் நீங்கள் வெறும் ஒரு அழைப்பு விடுத்தாலே போதும், பராமரிப்பு நிலையங்களிலிருந்து பணியாளர்கள் உங்கள் கார்களை உங்கள் வீட்டிற்கே வந்து எடுத்து கொண்டு சென்று மறுபடியும் உங்கள் வீட்டின் முற்றத்திற்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள்.

நீங்கள் பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு

ராகேஷ் என்பவரால் 2008 ல் ஆரம்பிக்க பட்ட இந்த நிறுவனம் இப்போது இந்தியா முழுவது இதனை விரிவுப் படுத்தி கொண்டு இருக்கிறது. இதனுடைய ’மை டிரிம், மை சிட்டி’ (My Dream, My City) என்ற திட்டம் மூலம் ஒவ்வொரு நகரிலும் தனது மையத்தை நிறுவ உள்ளது.  இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளது. 

ராகேஷ் சொல்கிறார், ‘நாங்கள், தொழில்கள் முனைவோர்களை எங்களுடன் இணைய அழைக்கிறோம், அவர்கள் எந்த தொழிலிலும் ஈடுபட்டு இருந்தாலும் பரவாயில்லை.  மேலும் இல்லதரசிகள், பணியிலிருந்து ஒய்வு பெற்றவர்கள், வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் மற்றும் பணம் சம்பாதிக்கும் எண்ணம் உள்ள எவரையும் எங்களுடன் இணைய அழைக்கிறோம்.  அவர்கள் தங்கள் வீட்டிலிருந்த படியே மேரிகார்.காம் வில் இணைந்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.  இதை பற்றிய தகவல்களை நீங்கள் ஆன்லைன் வீடியோக்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்’.


மேரிகார்.காம் தற்போது 10000 நபர்களை 1000 நகர்களில் இருந்து சேர்க்க திட்டம் கொண்டுள்ளது.  இவர்களுடன் பார்ட்னராக சேர்பவர்கள் மூலம் தனது கார் பாராமரிப்பு நிலையங்களை நிறுவ உள்ளது.  இதன் மூலம் பார்ட்னராக சேர்பவர்கள் தனக்கான பங்கை பெறலாம்.

சொந்த தொழில் செய்பவர்கள், கார் இன்சூரன்ஸ் ஏஜண்ட்டுகள் மற்றும் வீட்டிலிருந்த படியே பணம் சம்பாதிக்க நினைபவர்கள் உதிரி வருமானம் பெற இவர்களுடன் சேரலாம்.  கார் தொழில்களை பற்றிய முன் அனுபவம் தேவையில்லை. 

மேரிகார்.காம், தனியுரிம வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை மென்பொருளை தனது பார்ட்னர்களுக்கு வழங்கி எவ்வாறு தொழிலை விரிவிப்படுத்துவது என்பது பற்றி விளக்கும்.  இதன் மூலம் மூன்று நான்கு மாதங்களில் மாதம் ரூபாய் 50000 முதல் 100000 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்கிறது.  மேலும் அதன் பிறகு இத்தொழிலை முழு நேரமாக செய்பவர்கள் இதை விட இரண்டு மூன்று மடங்கும் சம்பாதிக்க வாய்ப்புள்ளதாக இந்நிறுவனம் சொல்கிறது.

தொழில் உதாரணம்

கார் உரிமையாளர்கள் MeriCAR.com என்ற இணையதள முகவரி மூலமாகவோ அல்லது MeriCAR ஹெல்ப்லைன் கால் சென்டர் மூலமாக தங்களது காரை பராமரிக்க பதிவு செய்து கொள்ளலாம்.  இந்நிறுவனத்தின் ஊழியர்கள் கார் உரிமையாளர்களுக்கு தங்களது பகுதியில் இருக்கும் பராமரிப்பு நிலையங்களை பற்றிய விவரங்களை தருவார்கள்.  கார் பராமரிப்பு நிலையங்கள் தரும் கமிஷன் தான் இந்நிறுவனத்தின் வருமானம்.  இதுவரை சுமார் 13000 க்கும் அதிகமான கார்களை மேரிகார்.காம் பதிவு செய்துள்ளது.


இது ஒரு B2B மாடல். கார் பராமரிப்பு நிறுவனங்கள் தங்களை இந்த இணையதளத்தில் இணைத்து கொள்வதின் மூலம் தங்களுக்கு அதிகமான வருமானம் கிடைக்கிறது.  மேலும் இந்நிறுவனம் கார் உரிமையாளர்களுக்கு உத்திரவாதம், பாதுகாப்பும் வழங்குகிறது.   

தொடர்ந்த திருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் மூலம் இத்தொழில் மேலும் வளர்கிறது.  மேலும் கார் உரிமையாளர்கள் இதன் மூலம் பெரும் பணத்தை மிச்ச படுத்த முடிகிறது.  இந்நிறுவனம் தயாரித்துள்ள சாப்ட்வேர் மூலம் பார்ட்னர்கள் மேரிகார்.காம் விற்கு கார்களை பதிவு செய்வதிலிருந்து, அவற்றை கண்காணிப்பது மற்றும் நிர்வகிப்பது வரை செய்ய முடியும்.  இதன் மூலம் அவர்கள் கமிஷன் பெற முடியும்.  கார் பராமரிப்பு நிலையங்களும் இந்த சாப்ட்வேரை பயன் படுத்தி தங்களது தொழிலை விரிவு படுத்த முடியும்.

இதில் பார்ட்னராக எவ்வாறு விண்ணப்பிப்பது

இந்நிறுவனத்தில் பார்ட்னராக முதலில் கீழ்வரும் லிங்கை பயன்படுத்தி அதில் வரும் பகுதியில் தங்களை பற்றிய விவரம் மற்றும் தாங்கள் தொடங்க விரும்பும் இடம் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும்.  இதன் மூலம் இதன் அடிப்படை பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும்.  மேலும் தகவல்கள் பெற விரும்பினால் அதற்க்காக சிறப்பு கோரிக்கை தர வேண்டும்.

Summary:

Mericar.com is an online portal that helps the users (car owners) to choose the best car service centers nearby their home.  All the car service centers are well verified and trustworthy.  Car owners thereby reduce their cost and timing.  Now, Mericar.com calls for partners through which anyone can earn handsome income from their home, in their leisure time.   Retired persons, housewives, small entrepreneur, students and anyone who wants to earn extra or full income can opt for this offer.


Courtesy: Source and Image: yourstory.com

Tuesday 13 May 2014

, , ,

மோட்டோரோலா அறிமுகப் படுத்துகிறது மோட்டோ E (Moto e): Rs.6999/-

மோட்டொரோலா சமீப காலமாக குறைந்த விலையுள்ள மற்றும் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மொபைல் போன்களை அறிமுகப் படுத்திவருகிறது.  அந்த வகையில் இன்று அது அறிமுகப் படுத்தியிருக்கும் மொபைல் போன் மோட்டோ E (Moto e).  இதன் விலை ரூபாய் 6999/- மட்டுமே.  இந்த சிறப்பம்சங்களை கொண்ட மொபைல் போன்களை விட இதன் விலை குறைவே.  இதன் சிறப்பம்சங்களை காணலாம்.


டிஸ்ப்ளே (Display)

மோட்டோ E, மிகவும் தெளிவான காட்சியமைப்பை கொண்டுள்ளது.  இதன் டிஸ்ப்ளே கார்னிங்® மற்றும் கொரில்லா® அம்சங்கள் மூலம் பாதுகாக்க பட்டுள்ளது.  இதனால் இதன் பாதுகாப்பு மற்றும் நீடித்த ஆயுள் உறுதிப்படுத்தப் படுகிறது. இது ஒரு நீர் எதிர்ப்பு ஸ்பிளாஸ் பாதுகாப்பு கொண்டு பாதுகாக்கப் படுகிறது.  இதனால் தண்ணீர் பட்டாலும் போன் சேதமடையாது.  இதன் திரை (Display) அளவு 4.3 அங்குலம்.

பேட்டரி

இதன் பேட்டரி 1980 mAh திறன் கொண்டது.  இதனால் இதன் பேட்டரி 24 மணி நேரத்திற்க்கு தங்கும் திறன் கொண்டது.

சமீபத்திய ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் மற்றும் புதுப்பித்தல் உத்தரவாதம்

இது ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4 என்ற சமீபத்திய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ளது.  இதன் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் மொபைலில் பல வேலைகளை செய்யலாம்.  மேலும் அதிவேக காட்சி அமைப்புகள், ஸ்மார்ட் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளையும் விரைவாக செய்யலாம்.  கூகிள் வாய்ஸ் மூலம் நீங்கள் போனை தொடாமலேயே கால் செய்யலாம்.  கூகிள் வரைபடத்தில் தேடலாம்.  நீங்கள் மொபைலை தொடாமலேயே உங்கள் பேச்சு மூலம் மொபைலை இயக்கலாம். மேலும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இலவசமாக புதுப்பிக்கலாம்.


மற்ற சிறப்பம்சங்கள்
  • திரை அளவு (Display): 4.4 அங்குலம் கொண்ட திரை
  • ஆப்பரேட்டிங்: ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4 பதிப்பு
  • இணையயம் மற்றும் இணைப்புகள்:  இமெயில், 3G, Wifi, யூஸ்பி (USB), Bluetooth
  • வண்ணங்கள்: கறுப்பு மற்றும் வெள்ளை
  • ப்ராஸசர்: 1.2 GHz குவால்காம் ஸ்னாப் 200, இரட்டை கோர்
  • கேமரா: 5 மெகா பிக்சல் கொண்டது, வீடியோ பதிவு செய்யக் கூடியது. (ஃபிளாஷ் இல்லை)
  • மெமரி கார்ட்: உள்ளடங்கிய 4 GB மெமரி கொண்டது, வெளி மெமரி 32 GB (மைக்ரோ SD)

மற்றவை:
  • இரண்டு GSM சிம்கள் கொண்டது
  • தொடுதிரை கொண்டது
  • மியூசிக் ப்ளேயர், வீடியோ ப்ளேயர் மற்றும் FM உள்ளது

விலை:

மோட்டோ E வின் விலை ரூபாய் 6999/-, இதே சிறப்பம்சங்கள் கொண்ட மற்ற மொபைல்களைவிட இதன் விலை குறைவே.



சிறப்பு சலுகை: இந்த மொபைல் Flipkart.com என்ற வணிக தளத்தில் மட்டுமே கிடைக்கும்.  கிரெடிட் கார்ட் உள்ளவர்கள் தவணை முறையிலும் வாங்கலாம்.  இன்று (14/05/2014) இந்த மொபைலை ஆர்டர் செய்தால், Transcend 8 GB மெமரி காட்ர் 50% தள்ளுபடி விலையிலும், மோட்டோ E கவர் 50% தள்ளுபடி விலையிலும் மேலும் ரூபாய் 1000 மதிப்புள்ள மின் புத்தகங்கள் இலவசமாகவும் கிடைக்கும்.

Monday 12 May 2014

, , , , ,

அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு அருமையான உணவு வகைகள்: FRSH

தொழில் நுட்பத்தில் பல முன்னேற்றங்களை கண்டுவரும் நம்முடைய வாழ்க்கை ஒன்றை கவனிக்க தவறிவிட்டது.  அதுதான் சத்தான உணவு.  இளைஞர்கள் பலர் இன்று குளிர் அடைக்கப்பட்ட அலுவலகங்களில் கடிகாரத்தை பார்க்காமல் பசியை கூட பொருப்படுத்தாமல் வேலை பார்க்கின்றனர்.  இதனால் அவசரகதியில் அவசர உணவுகளை உண்டு உடலை கெடுத்து கொள்கின்றனர்.  பல இளைஞர்கள் தனது குடும்பங்களை விட்டு விட்டு தனியாக தங்கியிருக்கின்றனர்.  இதனால் உணவு விசயத்தில் இவர்கள் படும் பாடு சொல்லிமாளாது. 


டில்லியில் ஐ.ஐ.டி யில் படித்த இளைஞர் படால் கொயல் ஒரு மெக்கானிகல் பொறியாளர்.  இந்த பிரச்சனைக்கு தீர்வு தேடி பல ஆண்டுகள் கழித்து உருவாக்கியதுதான் FRSH.  கவ்ரவ் லால் என்ற ஐ.ஐ.டி டில்லி மற்றும் ஐ.ஐ.ம் கல்கத்தாவில் படித்த நண்பரின் உதவி மூலம் சந்தைப் படுத்துதல் மற்றும் தொழில் உத்தியை கற்றுக் கொண்டு இந்த தொழிலை உருவாக்கியிருக்கிறார் படால்.

கடந்த மூன்றாண்டுகளில் இடைவிடாத உழைப்பின் மூலம் உருவானதே FRSH.  இது வேலை செய்யும் இளைஞர்களை கருத்தில் கொண்டு உருவானது.  இன்றைய இளைஞர்கள் தரம் நிறைந்த, குறைந்த நேரமே எடுத்து கொள்கிற, வகைகள் பல நிறைந்த உணவுவகைகளையே விரும்புகின்றனர்.  இவர்களுக்காக பல வணிக மாதிரிகளை சோதனை செய்த பின்னர் கடைசியாக வெற்றி பெற்றதுதான் FRSH.

நீங்கள் உணவுகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யலாம்.  பணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தலாம்.  நீங்கள் அலுவலகம் செல்வதற்க்கு பயணம் செய்யும் போதே FRSH ல் 30 வினாடிகளில் ஒரு ஆரஞ்ச் ஜூஸை ஆர்டர் செய்யலாம்.  நீங்கள் அலுவலகத்தில் நுழையும் போது அங்கு வரவேற்பறையில் உங்களுக்காக ஆரஞ்ச் ஜூஸ் தயாராக இருக்கும்.  அதற்கான பணத்தை செலுத்தி விட்டு நீங்கள் அதை பெற்று கொள்ளலாம்.

பல தடவைகளுக்கு பிறகு மற்றும் வாடிக்கையாளர்களின் ஆலோசனைகளுக்கு பிறகு உணவின் தரம் உயர்த்தப் பட்டிருக்கிறது.  தற்போது இந்த சேவை குர்க்கானில் உள்ள சில அலுவலகங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது.  விரைவில் இந்த சேவை குர்க்கானில் உள்ள பல அலுவலகங்களுக்கும் மேலும் பள்ளிகள், கல்லூரிகள், இரயில் நிலையங்கள், பல அடுக்குமாடி வீடுகளிலும் விரிவுப் படுத்தபட இருக்கிறது என்கிறார் படால்.


ஒரு நாளைக்கு 80 முதல் 90 வரை ஆர்டர்கள் பெறப்பட்டு வருகின்றன.  இந்த ஆண்டின் இறுதிக்குள் இதை 1000 ஆர்டர்களாக உயர்த்த FRSH திட்டமிட்டுள்ளது.  மேலும் இந்நிறுவனம் தொழில்நுட்பம், தானியங்கிகள் மற்றும் தரத்தில் முதலீடு செய்ய இருக்கிறது.  இதன் வாடிக்கையாளர்கள் தொடந்து இதற்க்கு ஆதரவு கொடுத்து வருவது இதன் வெற்றிக்கு ஒரு அடையாளம்.  இதன் முக்கிய நோக்கம் தரமான உணவு வகைகளை சரியான விலையில் கொடுப்பதேயாகும்.

Courtesy: The article was originally published by: yourstory.com
Image Courtesy: yourstory.com
, , , , ,

எக்ஸ் எஸ் பவர் கார்ட் (XS Powercard): உங்கள் பர்ஸில் அடங்கும் ஸ்மார்ட் போன் சார்ஜிங் கார்ட்

இன்று கைபேசி இல்லாத கைகள் இல்லை எனலாம்.  மேலும் நாளுக்கு நாள் பல புது அம்சங்களை கொண்ட செல்போன்கள் சந்தையில் அறிமுகமாகி வருகின்றன.  இந்திய ஒரு மிகப்பெரிய செல்போன்கள் சந்தை.  இதற்கு காரணம் இங்கு இருக்கும் மக்கள் தொகையும் ஏறிவரும் தனிநபர் வருமானமும். 

ஆனாலும் செல்போன்கள் வைத்திருப்பவர்களின் ஒரே குறை செல்போன்களில் தேவையான பாட்டரி சார்ஜ் இருப்பதில்லை.  ஏனென்றால் நாம் செல்போன்களை பேசுவதற்கு மட்டும் பயன் படுத்துவதில்லை.  பேசுவதை தாண்டி பல வேலைகளுக்கு நாம் செல்போன்களை பயன்படுத்துகிறோம்.  மேலும் செல்போன்களில் இணையம் பயன்பாடு அதிகரித்திருப்பதால் 3G, 4G என இணைய வேகம் அதிகரித்திருக்கிறது.  இந்த வேகம் செல்போன்களின் சார்ஜின் வேகத்தை பொருமளவிற்க்கு குறைக்கிறது.

இதனால் பல வேலைகளில் நம் செல்போன்கள் நமக்கு பயன்படும் நேரத்தில் செயலற்றும் போகின்றன.  இந்த குறையை போக்குவதற்க்காக மும்பையை அடிப்படையாக கொண்ட XYRA என்ற தொடக்க நிலை தொழில் நிறுவனம் உங்கள் பர்ஸிற்க்குள் அடங்க கூடிய ஸ்மார்ட் போன் சார்ஜரை அறிமுகப் படுத்திருக்கிறது.  இதன் பெயர் ‘எக்ஸ் எஸ் பவர் கார்ட்’ (XS Powercard).


இந்த சார்ஜரில் தகவல்கள் சேமிப்பகமும் (Data Storate) உள்ளடங்கிய டெட்ட கேபிளும் (Data Cable) இருக்கிறது.  இதே போல பல சார்ஜர்கள் இருந்தாலும் இதன் சிறப்பம்சம், நீங்கள் செல்போனையும் சார்ஜரையும் ஒரே நேரத்தில் வெளி மின்சார மூலத்தின் மூலம் சார்ஜ் செய்யும் போது முதலில் செல்போன் தான் சார்ஜ் ஆகும்.  அதன் பிறகு தான் பவர்கார்ட் சார்ஜ் ஆகும்.  மேலும் நீங்கள் பவர்கார்டை மட்டும் முதலில் சார்ஜ் செய்ய வேண்டுமென்றாலும் அவ்வாறே சார்ஜ் செய்யலாம்.

இந்த சார்ஜ்கார்ட் மினி யுஎஸ்பி (Mini USB) மற்றும் பல மின் இணைப்பு வகைகளை கொண்டுள்ளது.  இது 8/16/32 GB தகவல் சேமிப்பகம் (Data Storage) கொண்ட பல வகைகளில் கிடைக்கிறது.  இதன் விலை ரூபாய் 2000 மட்டுமே.  இந்த சார்ஜ்கார்ட் பல வண்ணங்களிலும் கிடைக்கிறது.  இது 2200 mAh சார்ஜ் சேமிக்கும் திறன் கொண்டது.  இதன் ஸ்டாண்ட்பை (Standby) திறன் 150 நாட்களுக்கு வரும்.

கீழ்வரும் வீடியோ மூலம் இதன் திறனை மேலும் அறியலாம்.



இந்த சார்ஜ்கார்டை அறிமுகப் படுத்தியது சாஹெஜ் சேதி, அர்மான் காந்தி மற்றும் அர்சான் இரானி.  இவர்கள் இந்த சார்ஜ்கார்டை உற்பத்தி செய்வதற்க்கு நிதி திரட்டி வருகிறார்கள்.  இது மாதிரி புதியதாக சிந்தித்து புது புது பொருள்களை மக்களின் தேவைக்கேற்ப அறிமுகம் படுத்துவதின் மூலம் நம் நாடும் உலக நாடுகளுக்கு மத்தியில் போட்டி போடும் திறன் பெறும். 

Courtesy: Source & Image: Trak.in

Sunday 11 May 2014

,

இந்தியாவில் தொழில் நடத்துவது கடினமா?

இந்தியாவில் தொழில் நடத்துவது கடினமாக இருக்கிறது.  நாளுக்கு நாள் புதிய தொழில்கள் தொடங்கும் இந்த நேரத்தில் இந்தியாவில் ஒரு தொழிலை நடத்துவதில் பல சிக்கல்கள் இருக்கிறது.  இதில் இந்தியா 134 ஆவது இடத்தில் இருக்கிறது.   

உலக வங்கியும், இன்டெர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனும் சேர்ந்து நடத்திய 2014 ஆம் ஆண்டிற்க்கான ’தொழில் நடத்துவது’ என்ற ஆய்வில் இந்தியா பிடித்திருப்பது 134 ஆவது இடம் மட்டுமே.  அட! மெத்தமே 189 நாடுகளே இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன.  இதில் வளர்ந்து வரும் நாடான இந்தியாவிற்க்கு கிட்டதட்ட கடைசி இடத்தை தான் பிடிக்க முடிந்துள்ளது.  இது போன வருடம் 2013 யை விட மோசம்.  போன வருடம் 131 ஆவது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 134 ஆவது இடத்திற்க்கு தள்ளப் பட்டிருக்கிறது.  இதன் பட்டியலை >இங்கே< காணலாம்.


இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பது சிங்கப்பூர்.  இது இந்த இடத்தை கடந்த 5 ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டுள்ளது.  சிங்கப்பூரில் நீங்கள் ஒரு தொழில் தொடங்க வேண்டுமென்றால் அதற்கு 48 மணிக்கும் குறைவான நேரமே ஆகும்.  ஆனால் இந்தியாவில் அதற்கு குறைந்தது 27 நாட்களாவது ஆகும்.  அதுவும் அனைத்து நிலையும் உங்களுக்கு சாதகமாக இருந்தால் மட்டும். 

ஹாங்காங், நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் இந்த பட்டியலில் அடுத்த அடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன.  மேலும் BRIC Nations என்று சொல்லப்படும் வளர்ந்து வரும் நாடுகளின் குழுவில் இந்தியா கடைசி இடத்தில் இருக்கிறது.  இதில் ரஷ்யா 92 ஆவது இடத்திலும், சீனா 96 ஆவது இடத்திலும், பிரேசில் 116 ஆவது இடத்திலும் இருக்கின்றன.

மேலும் ’தொழில் தொடங்குவது’ என்ற பட்டியலில் இந்தியா பிடித்திருப்பது 179 ஆவது இடம்.  ஆக வெறும் 10 நாடுகள் மட்டுமே அதன் பின் இருக்கிறது.  இந்தியாவில் ஒரு தொழில் தொடங்க 12 வகையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது.  மேலும் இதற்கு குறைந்தது ஒரு மாத காலம் ஆகும்.  ஒரு வணிகத்தை தொடங்குதல், அனுமதி பெறுதல், ஒப்பந்தங்கள் செயல்படுத்துவது மற்றும் வரி செலுத்துவது ஆகியவற்றில் ஏற்படும் தாமதங்கள் இந்தியா இந்த இடத்தை பிடிக்க காரணமாயிருக்கிறது.


ஆனாலும் இத்தனை தாமதங்கள் இருந்தாலும் தொழில்களுக்கு கடன் பெறுவதிலும் முதலீட்டாளர்களின் நலன் காப்பதிலும் இந்தியா சிறந்து விளங்கியிருக்கிறது.  இத்தனை தடைகள் இருந்தாலும் இந்த விதத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை தைரியமாக முதலீடு செய்யலாம்.  இதனால்தான் உலக பொருளாதாரத்தில் தேக்கங்கள் இருந்தாலும் இந்தியாவில் அதன் பாதிப்பு அவ்வளவாக இல்லை.

Courtesy: The article was originally published by: Trak.in
Image Courtesy: Trak.in

Friday 9 May 2014

, , ,

குடிசையில் பிறந்து கோடீஸ்வரர்கள் ஆன 7 பேர் தரும் உத்வேகம்: பகுதி-3

குடிசையில் பிறந்து கோடீஸ்வரர்கள் ஆனவர்களை பற்றி தெரிந்து கொண்டு வருகிறேம்.  இதன் >பகுதி-1< >பகுதி-2< யும் படிக்கவும்.

லி கா ஷிங்

லி கா ஷிங் ஒரு ஹாங்காங் தொழிலதிபர், முதலீட்டாளர் மற்றும் ஒரு கொடையாளி.  இவர் தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரர்.  இவருடைய சொத்தின் மதிப்பு சமீபகாலம் வரை டாலர் 31.9 பில்லியன் என்று ஒரு கணக்கு சொல்கிறது.


ஷிங் சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் பிறந்தவர்.  இவர் தனது 15 ஆவது வயதிலேயே தன் குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு செல்ல வேண்டியிருந்தது.  இவரி ஒரு பிளாஸ்டிக் டிரேடிங் செய்யும் நிறுவனத்தில் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் கடினமான வேலை செய்து வந்தார்.  சில வருடங்களுக்கு பின்னர் தன் சொந்த நிறுவனமான சேங் காங் நிறுவனத்தை தொடங்கினார்.

பின் இவரது தொழில்களை பல துறைகளிலும் விரிவு படுத்தினார்.  அதில் வங்கிகள், கட்டுமான பணி, ரியல் எஸ்டேட், பிளாஸ்டிக், செல் பேசி, சாட்டிலைட் டிவி, சிமெண்ட், சூப்பர் மார்க்கேட், ஒட்டல்கள் ஆகிய மிக சிலவும் அடங்கும்.  இன்று ஹாங்காங்கில் இவர் கைபடாத தொழில்களே கிடையாது எனலாம்.  இவருடைய கடின உழைப்பால் இன்று 55 நாடுகளில் சுமார் 2 லட்சத்திற்க்கும் மேலான தொழிலாளிகள் கொண்ட இவரது தொழில்கள் விரிவுப் படுத்தப்பட்டிருக்கின்றன. 

ஜன் கவ்ம்

ஜன் கவ்ம், இன்று பலரது கைப் பேசிகளில் பயன்ப்படுத்த படும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும், வாட்ஸ் அப் (WhatsApp) என்ற மொபைல் அப்ளிகேஷனை கண்டுபிடித்தவர்.  இவரது கண்டுபிடிப்பை பேஸ்புக் நிறுவனம் டாலர் 19 பில்லியன் கொடுத்து வாங்கியிருக்கிறது.  இதனால் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆனவர்கள் பட்டியலில் ஜன் கவ்ம் சேர்ந்திருக்கிறார். 


இவர் உக்ரேனில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர்.  இவரது 16 ஆவது வயதில் வயிற்று பிழைப்புக்காக கலிபோர்னியாவிற்க்கு குடிபெயர்ந்தது இவரது குடும்பம்.  பல சரக்கு கடையில் தரையை சுத்தம் செய்து அதற்க்கான கூலியை வாங்குவதற்க்கு வரிசையில் நின்று வாங்கியவர் தனது 18 ஆவது வயதில் திறமைப் பெற்ற ஒரு கம்ப்யூட்டர் ஹேக்கராக (Computer Hacker) மாறினார். 

1997 ஆம் ஆண்டு இவரை யாஹூ (Yahoo) நிறுவனம் உள்கட்டமைப்பு பொறியாளராக பணியமர்த்தியது.  பின்பு இவரது பிறந்த நாளில், பிப்ரவரி 24, 2009 ஆம் ஆண்டு  வாட்ஸ் அப்ஸ் அப்பிளிகேஷனை அறிமுகப் படுத்தினார்.

திருபாய் அம்பானி

கடைசியாக ஆனால் மிகவும் குறிப்பாக, நமது இந்தியர், திருபாய் அம்பானி.  இன்று இந்தியாவில் இருக்கும் மிகப் பெரிய நிறுவனம், ரிலயன்ஸ் இண்டஸ்ரிஸையை உருவாக்கியவர்.  இவர் ஒரு பள்ளி ஆசிரியருக்கு மகனாக பிறந்தவர்.  இவருடன் உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் இரண்டு சகோதரிகள்.  இவர் சிறுவயதிலேயே ஒரு குவளை நிலக்கடலை எண்ணெயை மொத்த விலையில் கடனுக்கு வாங்கி அதை சில்லைறையாக விற்பார்.  இதனால் இவருக்கு கொஞ்சம் லாபம் கிடைத்தது.


வார இறுதி நாட்களில் பள்ளி விடுமுறையில் தன் கிராமத்தில் சிறு கடைகளை போட்டு விற்பனை செய்து தன் குடும்பத்திற்க்கு உதவி வந்தார்.

இவர் தனது 17 ஆவது வயதில் யேமன் நாட்டிற்க்கு வேலை வேண்டி குடிப்பெயர்ந்தார்.  அங்கு பொருட்களை பல இடங்களுக்கு அனுப்பும் வேலை செய்து வந்தார்.  அதன் பிறகு இரண்டாண்டுகள் கழித்து இவர் வேலை செய்த நிறுவனம், ஷெல் பொருட்களின் (Shell Products) விநியோகஸ்தரராக ஆகியது.  இதனால் நிறுவனம், இவருக்கு எண்ணெய் நிரப்பும் நிலையத்தை மேற்பார்வையிடும் பணி பதவி உயர்வு கொடுத்தது.  அங்கு வேலை செய்து கொண்டிருந்த அம்பானி தான் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவுவதாக அடிக்கடி கற்பனை செய்து கொண்டார்.  அதை பின்னாளில் நினைவாக்கியும் காட்டினார்.  

இந்தியாவிற்கு திரும்பிய பின்னர் அம்பானி அகமத் நகரில் ஒரு ஜவுளி ஆலையை நிறுவினார்.  இந்த ஆலை மிகப்பெரிய வெற்றியடைந்தாலும், இவர் மீது பங்கு சந்தையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்று குற்றச்சாட்டும் இருந்தது.  இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் பின்பு நிரூபிக்கப் படவில்லை. 

2007 ஆம் ஆண்டு வாக்கில் இவரது அம்பானி குடும்பத்திற்கு டாலர் 60 பில்லியன் சொத்து சொந்தமாகி, உலகத்திலேயே இரண்டாவது பெரிய பணக்கார குடும்பமாகியது.


பொதுவாக இப்படி பட்டவர்களின் வாழ்கை வரலாறுகளை படிக்கும் போது நமக்கும் ஒரு உத்வேகம் கிடைக்கிறது.  இவர்கள் அனைவரும் குடிசையிலிருந்து கோடீஸ்வரர்கள் ஆனவர்கள்.  ஆகையால் பணக்காரர்கள் ஆவது அல்லது அதிக பணம் சம்பாதிப்பது பாமரனுக்கும் சாத்தியம் என்று இவர்கள் மூலம் உண்மை ஆகிறது.  இதனுடன் இப்பகுதி நிறைவடைகிறது.  இதுப் பற்றி உங்களது கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

Courtesy: The article was originally published by: yourstory.com
Image Courtesy: yourstory.com

Thursday 8 May 2014

, , ,

குடிசையில் பிறந்து கோடீஸ்வரர்கள் ஆன 7 பேர் தரும் உத்வேகம்: பகுதி-2

குடிசையில் பிறந்து கோடீஸ்வரர்கள் ஆனவர்களை பற்றி தெரிந்து கொண்டு வருகிறேம்.  இதன் >பகுதி-1< யும் படிக்கவும்.

ஓப்ரா வின்ஃப்ரே

ஓப்ரா வின்ஃப்ரே, தான் நடத்திய மிக பிரபலமான ’தி ஓப்ரா வின்ஃப்ரே’ என்ற பல பரிசுகளை வாங்கிய நிகழ்ச்சியை நடத்தியதன் மூலம் புகழ் பெற்றவர்.  இதன் மூலம் இவருக்கு ’ஊடகங்களின் அரசி’ என்ற பட்ட பெயரும் உண்டு.  இவர் இருபதாம் நூற்றாண்டின் பணக்கார ஆப்ரிக்க-அமெரிக்கர் என்று பணக்காரர்கள் தரவரிசையில் இடம் பெற்றவர்.


இவர் மிசிசிப்பியில் ஒரு ஏழ்மையான சிறு வயதிலேயே தாயான பெண்ணுக்கு மகளாக பிறந்தவர்.  இவர் தனது 9 ஆவது மற்றும் 13 ஆவது வயதில் கற்பழிக்கப்பட்டவர்.  இவர் சிறுவயதிலியே பாலியல் தொந்தரவு தாங்காமல் வீட்டை விட்டு ஓடி வந்தவர்.  தனது 14 ஆவது வயதிலேயே தாயானவர்.  இவரது குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இறந்து விட்டது.  இவர் பள்ளியில் படிக்கும் போதே வானொலியில் மாலையில் செய்திகள் படிக்கும் வேலைக்கு சேர்ந்தார்.  பின்பு இவரது திறமையை பார்த்து இவரை காலையில் நடந்த ஒரு விவாத நிகழ்ச்சிக்கு மாற்ற பட்டார்.

இவர் தனது 32 ஆவது வயதில் தனது நிகழ்ச்சியின் மூலம் கோடீஸ்வரர் ஆனர்.  ஃபோபர்ஸ் பத்திரிக்கை இவரை உலக பணகாரர்கள் வரிசையில் பட்டியலிட்டது.   2014 ஆம் ஆண்டு வரை இவரது சொத்தின் மதிப்பு டாலர் 2.9 பில்லியன்.

லாரி எலிசன்

லாரி எலிசன் ஒரு திருமணமாகாத யூத பெண்ணுக்கு பிறந்தவர்.  இவரது தந்தை ஒரு இத்தாலிய-அமெரிக்க விமான ஓட்டி.  இவர தன் ஒன்பதாவது வயதிலேயே நிமோனியாவால் பாதிக்கப் பட்டவர் மற்றும் தன் தாயாரால் உறவினருக்கு தத்து கொடுக்கப்பட்டவர் என்று விக்கிபீடியா கூறுகிறது.  தத்தெடுத்த தாய் இவரிடம் மிகவும் அன்பாக இருந்தார்.  ஆனால் இவரது தத்தெடுத்த தந்தை இவரிடம் அதிக அன்பு காட்டவில்லை.  


எலிசன் படிப்பில் சிறந்து விளங்கினார்.  தனது தத்தெடுத்த தாய் இறந்ததால் தனது கல்லூரி படிப்பை இரண்டாம் ஆண்டிலெயே நிறுத்தினார். பிறகு சிகாகோ பல்கலைகழகத்தில் தனது படிப்பை தொடந்தார்.  அங்குதான் கம்ப்யூட்டர் வடிவம் பற்றி அறிந்தார்.  1966 ஆம் ஆண்டு தனது 22 ஆம் வயதில் வட கலிபோர்னியாவிற்கு குடிபெயர்ந்தார். 

1977 ஆம் ஆண்டு இரண்டு கூட்டாளிகளை சேர்த்து கொண்டு டாலர் 2000 முதலீட்டில் சாப்ட்வேர் டெவலப்மண்ட் லபாரட்டரிஸ் (Software Development Laboratories - SDL) என்ற நிறுவனத்தை தொடங்கினார்.  1982 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தனது ஆர்க்கிள் டேட்டாபேஸ் (Oracle Database) என்ற தயாரிப்பு மூலம் ஆர்க்கிள் ஸிஸ்டம்ஸ் கார்ப்ரேஷன் (Oracle Systems Corporation) என்ற பெயர் மாற்றம் பெற்றது. 2011 ஆம் ஆண்டு போபர்ஸ் பத்திரிக்கை இவரை உலக பணக்காரர்கள் பட்டியலில் சேர்த்தது.  உலக பணக்காரர்களில் ஐந்தாவது இடத்தை பிடித்தவர் இந்த எலிசன்.  இவரது சொத்தின் மதிப்பு சுமார் டாலர் 36.5 பில்லியன்.


இதன் >பகுதி-3< யும் படிக்கவும்.

Courtesy: The article was originally published by: yourstory.com
Image Courtesy: yourstory.com

Wednesday 7 May 2014

, , ,

குடிசையில் பிறந்து கோடீஸ்வரர்கள் ஆன 7 பேர் தரும் உத்வேகம்: பகுதி-1

உலகத்தில் உள்ள அனைவருமே பணகாரர்களாக பிறப்பதில்லை.  அதே சமயத்தில் ஏழையாக பிறந்தவர்கள் எல்லாருமே ஏழையாகவே சாவதில்லை.  அதில் சில பேர் சாதித்து விட்டு போனவர்கள்.  குடிசையில் பிறந்து கோடீஸ்வரர்கள் ஆனவர்கள்.  இவர்களில் வாழ்கை வரலாற்றை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு படிப்பினை, பாதை மற்றும் ஒரு வழிகாட்டி.  அப்படி ஏழையாக பிறந்து பிற்காலத்தில் கோடீஸ்வரர்கள் ஆன ஏழு பேரின் வாழ்கை வரலாற்றை சற்று குறிப்பெடுப்போம்.

ஆண்ட்ரூ கார்னகி

ஆண்ட்ரூ கார்னகி ஒரு அமெரிக்க தொழிலதிபர்.  கார்னகி ஸ்டீல் கம்பெனியை உருவாக்கியவர்.  அந்த காலத்தில் லண்டன் முழுவதும் உருவாக்கிய இரும்புகளை விட இவர் கம்பெனி அதிகமான இரும்புகளை உற்பத்தி செய்யது.  ஆண்ட்ரூ கார்னகி ஸ்காட்லாந்தில் ஒரு ஏழை கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர்.

Image Courtesy: yourstory.com

வறுமையிலேயே தன் வாழ்கையை துவக்கினார் இவர்.  ஒரு அறை மட்டுமே கொண்ட வீட்டில் தங்கினார்.  பல வேளைகளில் பசியை போக்க படுத்துறங்கியவர். வறுமையை போக்குவதற்க்காக அமெரிக்காவிற்க்கு இவரது குடும்பம் குடிபெயர்ந்தது. 

இவர் தனது 13 ஆவது வயதில் நூல் சுற்றி வைக்கும் சக்கரத்தை சுற்றும் தொழிலாளியாக பிட்ஸ்பர்கில் ஒரு பருத்தி ஆலையில் சேர்ந்தார்.  ஒரு நாளைக்கு 12 மணி நேரம் விதமாக ஒரு வாரத்திற்கு 6 நாட்கள் வேலை செய்தார்.  இவரது ஒய்வு நேரத்தில் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார்.  வாழ்கையில் அடிமட்டத்திலிருந்து முன்னேறிய பலரது வாழ்கை வரலாறுகளை படித்து அதன் மூலம் உத்வேகம் பெற்றார்.

கார்னகி பல வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.  தபால் போடும் பையனாக, இரயில் தண்டவாளங்களை பராமரிக்கும் ஆளாக பணியாற்றினார்.  பின்பு மெஷின் ஆப்ரேடராக பதவி உயர்வு பெற்றார்.  நூலகங்கள் மூலம் தனது கல்வி அறிவை வளர்த்து கொண்டார்.  கொஞ்சம் கொஞ்சமாக தொழில்கள் பற்றி கற்று கொண்டார்.  இரும்பு மற்றும் எண்ணெய் கம்பெனிகளில் முதலீடு செய்தார்.  அது அவருக்கு பெரிய லாபத்தை கொடுத்தது.  1889 ஆம் ஆண்டு வாக்கில் இவர் உருவாக்கிய இரும்பு கம்பெனி உலகத்தில் நம்பர் ஒன்னாக உருவாகியது.  கார்னகி உலக பணக்காரர்களில் ஒருவரானார்.

இன்றைய அமெரிக்கா உருவாகுவதற்கு இருந்தவர்களில் முக்கியமானவர் கார்னகி.  1901 ஆம் ஆண்டு இவரது கம்பெனியான கார்னகி ஸ்டீலை ஜெ.பி.மார்கனுக்கு டாலர் 480 மில்லியனுக்கு விற்று, பின்பு தான தர்மங்கள் செய்து கொடையாளர் ஆனார்.  இவர் பல கோடிகளை நியூயார்க் நூலகத்திற்க்கு கொடுத்தார்.  பிட்ஸ்பர்கில் கார்னகி தொழில் நுட்ப நிறுவனத்தை நிறுவினார்.  அது இப்போது கார்னகி-மெலன் பல்கலைகழகம் என்று அழைக்கப் படுகிறது.  மேலும் உயர் கற்பித்தலுக்காக கார்னகி அறக்கட்டளையும், உலக அமைதிக்காக கார்னகி நன்கொடை நிறுவனத்தையும் நிறுவினார்.

சாமுவேல் வால்டன்

சாதாரண சிறிய பல சரக்கு கடையாக இருந்து இன்று அதிகமாக சர்ச்சைக்கும் பல சிறு வணிகர்களுக்கு அச்சத்தை தரும் டாலர் 23 பில்லியன் மதிப்புடைய, பொருளாதார மந்தம் நிலவிய காலத்தில் உருவான வால்ட் மார்ட் நிறுவனத்தை உருவாக்கியவர்தான் சாமுவேல் வால்டன். 

Image Courtesy: yourstory.com

தனது குடும்பத்திற்க்காக பல சிறிய வேலைகளை செய்தவர்.  தன் வீட்டில் பசுமாடு தந்த அதிகப் படியான பாலை வாடிக்கையாளர்களுக்கு விற்று வந்தவர்.  அதற்கு பிறகு செய்தித்தாள் போடும் வேலையும் செய்திருக்கிறார்.  மாத இதழ்களுக்கு சந்தாவும் வசூலித்திருக்கிறார்.  கல்லூரியில் படிக்கும் போதே பல வேலைகளை செய்திருக்கிறார்.  

கல்லூரி படிப்பை முடித்த பிறகு இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில் இராணுவத்தில் சேர்ந்தார்.  இராணுவத்தில் இருந்து ஓய்வுப் பெற்ற பிறகு தனது 26 வது வயதில் ஒரு பல சரக்கு கடையை மேற்பார்வையிடும் வேலைக்கு சேர்ந்தார்.

கடனை வாங்கி தனது முதல் கடையை வாங்கினார்.  சில நாட்களிலேயே தனது இரண்டாவது கடையையும் வாங்கினார்.  மூன்றாண்டுகளில் இவரது விற்பனை டாலர் 2 லட்சத்தை தாண்டியது.  இவருடைய முதல் வால்ட்-மார்ட் கடை 1962 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் நாள், ஆர்கன்சாஸில் உள்ள ரோஜர்ஸில் தொடங்கப் பட்டது.  போபர்ஸ் பத்திரிக்கை 1982 லிருந்து 1988 ஆண்டுகளில் வால்டனை உலக பணக்காரர்களில் ஒருவராக அறிவித்தது.  அவர் மறைந்த 1992 ஆம் ஆண்டில், அவருக்கு 1960 கடைகள் சொந்தமாக இருந்தது.  சுமார் 3 லட்சத்திற்க்கும் மேலான தொழிலாளர்கள் இருந்தார்கள்.  ஆண்டு நிகர வருமானம் சுமார் டாலர் 50 பில்லியனுக்கும் மேலிருந்தது.


இதன் >பகுதி-2< >பகுதி-3< யும் படிக்கவும்.

Courtesy: The article was originally published by: yourstory.com

Tuesday 6 May 2014

,

நீங்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்பவரா? இதை படியுங்கள் முதலில்!

நீங்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் திறன் கொண்டவர் என்று மார்தட்டுபவரா?  இதோ, உங்களுக்காக ஒரு செய்தி.

’நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு முயல்களை துரத்தினால், உங்களால் ஒரு முயலையும் பிடிக்க முடியாது’- என்கிறது ஒரு ரஷ்யாவின் பழமொழி.  இப்போது நான் எதைப் பற்றி சொல்ல போகிறேன் என்று யூகித்து இருப்பீர்கள்.  அட! நீங்கள் தான் மல்டி டாஸ்க் (Multi Task) என்று ஆங்கிலத்தில் சொல்ல படுகிற பல வேலைகளை செய்பவராயிற்றே!

Image Courtesy: YourStory.com
முதன் முதலின் இந்த மல்டி டாஸ்க் என்ற சொல் 1960 களில் தான் ஆரம்பமாயிற்று.  அப்போது தான் கம்ப்யூட்டருடன் மனித மூளையை ஒப்பிட்டு பார்க்கும் ஒரு ஒப்பிடு ஆரம்ப மானது.  உதாரணத்திற்கு ஒரு கம்ப்யூட்டர் மூன்று வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் ஆற்றல் கொண்டது எனில், அது அந்த மூன்று வேலைகளையும் மூன்று பகுதிகளாக பிரித்து அவற்றை முடிக்கும்.  இந்த ஒப்பீடு மூலம் பலர் ‘பல வேலைகளை செய்யும் திறமைசாலி’ என்று பல பாரட்டுகளையும் பரிசுகளையும் பெற்றார்கள், பெற்று கொண்டிருக்கிறார்கள்.

பல வேலைகளை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள்

பொதுவாக நமது மூளை பல பணிகளை செய்யும் திறன் கொண்டது.  அதனால் தான் தெரிந்தோ தெரியாமலேயோ நாம் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்கிறோம்.  உதாரணத்திற்கு பாட்டு கேட்டு கொண்டே பேப்பர் படிக்கிறோம்.  ஆனால் இவற்றையேல்லாம் நாம் அதிக திறன் கொண்டு செய்வதில்லை.  இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டுமே குறைந்த தீவிரம் கொண்ட செயல்கள்.  ஆனால் எப்போது நாம் அதிக தீவிரம் கொண்ட செயல்களை செய்கிறோமோ அப்போது நமது செயல் திறன் பாதிக்கப் படுகிறது.  உதாரணத்திற்கு உங்கள் மருத்துவர் அவரது மனைவியிடம் பேசிக் கொண்டே உங்களுக்கு சிகிச்சை அளிக்க விரும்ப மாட்டீர்கள்.  பல வேலைகளை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள்:

  • உங்கள் ஐ.கியூ (Intelligent Quotient- IQ) குறைகிறது என்று லண்டன் யூனிவர்சிட்டி நடத்திய ஆய்வு கூறுகிறது.  ஐ.கியூ என்பது அறிவுதிறனை அளவிடும் ஒரு மதிப்பீடு.
  • உங்கள் செயல் திறனை குறைக்கிறது என்று மற்றொரு ஆய்வு சொல்கிறது.  கிட்டதட்ட 40 சதவீதம் உங்கள் செயல் திறன் குறைவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • மேரிலாந்தில் உள்ள ஒரு நரம்பு கோளாறுகள் தேசிய நிறுவனம் நடத்திய ஆய்வு, பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதால் மன அழுத்தம் அதிகரிக்கிறது என்று கண்டறிந்துள்ளது.
  • தொடந்து பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதால் மூளையை பாதிப்படைய செய்யும்.  இதனால் கற்கும் திறன் மற்றும் கவன குறைவும் ஏற்படுகிறது.
  • இதனால் குறைந்த தீவிரம் கொண்ட பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்பவரை விட அதிக தீவிரம் கொண்ட பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்பவர் அதிகமாக பாதிப்படைகிறார்.

எப்படி இதை கையாள்வது?
  • முதலில் நீங்கள் செய்யும் வேலைகளில் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.  வேறு எந்த நினைவுகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.
  • வேலைகளை ஒவ்வொன்றாக முடிக்க பாருங்கள்.  ஒரு வேலையை முடித்த பிறகு அடுத்த வேலையை கையில் எடுங்கள்.
  • காலையில் எப்போதும் போல் இல்லாமல் ஒரு முப்பது நிமிடம் முன்னதாக எழுந்து நடைபயிற்சி அல்லது தியானம் செய்யுங்கள்.
  • இரவு படுக்கைக்கு எப்போதும் போல் இல்லாமல் ஒரு முப்பது நிமிடம் முன்னதாக தூங்க செல்லுங்கள்.
Courtesy: The Article was originally published by: YourStory.com

Monday 5 May 2014

,

ஒரு முடிதிருத்தும் தொழிலாளி வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் – ரமேஷ் பாபு

ரோல்ஸ் ராய்ஸ் என்பது ஒரு உயர் ரக கார் வகையை சார்ந்தது.  இதன் விலை எவ்வளவு தெரியுமா?  இதன் விலை இந்தியாவில் ரூபாய் இரண்டு கோடியே ஐம்பது லட்சத்திலிருந்து தொடங்குகிறது.

ரமேஷ் பாபு, ஒரு முடிதிருத்தும் தொழிலாளியாக இருந்து இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராக உயர்ந்தவர்.  இவர் தனது குறைவான சேமிப்பிலிருந்து 1994 ஆம் ஆண்டு மாருதி காரை வாங்கியவர்.  2004 ஆம் ஆண்டில் இவர் நான்கு கார்களை வாடகைக்கு தரும் தொழிலை விரிவு படுத்தினார்.  இன்று 2014 ஆம் ஆண்டில் இவரிடம் இருக்கும் கார்களின் எண்ணிக்கை 200.  இந்த கார்களில் 75 கார்கள் உயர்வகையை சார்ந்தவை.

Image Courtesy: yourstory.com

ரமேஷ் பாபு தனது வாழ்க்கையை அடிமட்டத்திலிருந்து தொடங்கியவர்.  இவ்வளவு வெற்றி பெற்ற பிறகும் இவர் தன் தந்தை சொல்லி கொடுத்த முடி திருத்தும் தொழிலை மறக்க வில்லை.  அதற்கு இவர் மனதில் எப்போதும் ஒரு இடம் உண்டு.  இன்றும் இவர் முடிதிருத்துவதிற்க்கு ரூபாய் நூறு மட்டுமே வாங்குகிறார்.  இவர் பல செய்திதாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் ‘கோடீஸ்வர முடிதிருத்தும் தொழிலாளி’ என புகழ் பெற்றவர்.

முந்தைய வாழ்க்கை

இவர் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.  இவரது தந்தை ஒரு முடிதிருத்தும் தொழிலாளி.  இவர் தந்தை இறந்த பிறகு, இவரது தாய் வீட்டு வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.  இவரது தந்தையின் தொழிலை இவரது உறவினர் எடுத்து நடத்தினார்.  இதன் மூலம் இவரது குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் ஐந்து கிடைத்தது.  இந்த குறைந்த வருமானம் குடும்பத்திற்க்கு போதவில்லை.  நாள் ஒன்றுக்கு ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள முடியும்.

ரமேஷ் பல சிறு சிறு வேலைகளை செய்து தனது குடும்பத்திற்க்காக உதவினார்.  பேப்பர் போடுவதிலிருந்து, பால் டெலிவரி செய்யும் சிறு சிறு வேலைகளை செய்து எப்படியோ தனது S.S.L.C. படிப்பை முடித்து, மாலையில் PUC சேர்ந்தார்.

பிறகு இவரது தாய்க்கும் முடிதிருத்தும் தொழிலை ஏற்று நடத்தி வந்த உறவினருக்கும் அடிக்கடி சண்டைகள் வந்து போயின.  ஒரு கட்டத்தில் இவரது உறவினர் இவர்களுக்கும் பணம் தருவதை நிறுத்தி விட்டார்.  அப்போது, இத்தொழிலை ஏற்று நடத்தலாம் என்று முன்வந்த இவரை இவரது தாய் இவரது படிப்பை காரணம் காட்டு இதற்கு சம்மதிற்க்க வில்லை.

ஆனால் அந்த கடையை இவர் ஏற்று நடத்த தொடங்கினார்.  காலையில் இத்தொழிலை செய்து மாலையில் படிப்பை தொடர்ந்த இவர் இந்த தொழிலை கொஞ்சம் கொஞ்சமாக கற்க தொடங்கினார்.  மாலையில் படிப்பு முடிந்த பிறகு மீண்டும் இரவிலிருந்து அடுத்த நாள் காலை ஒரு மணிவரை முடிதிருத்தும் தொழிலை தொடர்ந்தார்.

திருப்புமுனை

1993 ஆம் ஆண்டு பின் பகுதியில் இவரது உறவினர் வாங்கிய சிறிய காருக்கு எதிராக ஒரு சிறிய பெருமைக்காக, இவர் ஒரு பழைய மாருதி வேனை வாங்கினார்.   தனது குறைந்த சேமிப்பு மற்றும் கடன் மூலம் இவரது உறவினருடைய காரைவிட பெரியதான இந்த காரை வாங்கினார்.  இதற்காக இவரது தாத்தா அவரது சொந்த நிலத்தை கடனுக்காக அடமானம் வைத்தார். 

கடனுக்கான வட்டி ரூபாய் 6800 கட்டுவதற்க்கு மிகவும் சிரமப்பட்டார்.  பின்பு இவருடைய தாய்க்கு தெரிந்த ஒரு அக்கா கொடுத்த யோசனை மூலம் அந்த காரை வாடைகைக்கு விடத்தொடங்கினார்.  இந்த தொழிலைப் பற்றிய அனைத்து விபரங்களையும் இவருக்கு அந்த அக்கா சொல்லி கொடுத்தார்.

தொடர்ந்த வெற்றி

பிறகு 1994 ஆம் ஆண்டு முதல் இந்த தொழிலை முழுமையாக நடத்த தொடங்கினார்.  இவரது முதல் தொழில் Intel நிறுவனத்தின் மூலம் கிடைத்தது.  இதை வாங்கி கொடுத்தவர் அந்த அக்காதான் ஏனென்றால் அவர் அங்கு பணிபுரிந்து வந்திருக்கிறார்.  படிப்படியாக ஒவ்வொரு கார் களாக வாங்கி இந்த தொழிலை மேலும் விரிவுப் படுத்தினார்.  2004 ஆம் ஆண்டு வரை இவரிடம் இருந்த மொத்த கார்களின் எண்ணிக்கை 5 லிருந்து 6 வரை மட்டுமே.

பிறகு இந்த தொழிலில் பல போட்டிகள் வர தொடங்கிய போது, இவர் உயர் ரக கார்களை வாங்கி பயன் படுத்த தொடங்கினார்.  ஏனென்றால் இந்த தொழிலில் போட்டியாக இருந்தது சிறிய வகை கார்கள் மட்டுமே.

2004 ஆம் ஆண்டு ரூபார் 40 லட்சம் கொடுத்து ஒரு உயர்ரக முதன் முதல் வாங்கினார்.  அப்போது இதன் மதிப்பு அதிகம்.  இதை வாங்கிய போது பலரும் எதிர் கருத்துகள் தெரிவித்தனர்.  ஒருவேளை இந்த யோசனை சரியாக வில்லையேன்றால் இந்த காரை விற்று விடும் நோக்கில் இருந்தார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக இவரது தொழில் மிகவும் நன்றாக செயல்பட தொடங்கியது. 

தொழிலில் வெற்றி பெற இடர்களை எதிர் கொள்ளுங்கள்

2011 ஆம் ஆண்டு இவர் வாங்கிய உயர்ரக கார் ரோல்ஸ் ராய்ஸ், வாங்கிய விலை ரூபாய் 4 கோடி.  பலரும் இந்த யோசனையை எச்சரித்தார்கள். இதில் உள்ள இடர்களை பற்றி கூறினார்கள்.  அப்போது இவர் தனக்கு தானே கூறி கொண்டது, ‘2004 ஆம் ஆண்டு நான் ரிஸ்க் எடுத்து உயர்ரக காரை வாங்கினேன்.  அப்படியென்றால் ஏன் என்னால் இப்போது ரிஸ்க் எடுக்க முடியாது?’  இந்த காரை வாங்கி மூன்று வருடங்கள் ஆகிறது.  இதற்க்கான வரவேற்பு மிகவும் அதிகமாக இருந்தது.  இதற்க்கான மாத தவணை வரும் டிசம்பர் மாதத்திற்க்குள் முடிகிறது’.

பெரிய சவால்கள்

எந்த ஒரு தொழிலிலும் ரிஸ்க் இருக்கிறது.  கடந்த ஏப்ரல் மாதம் இவர் 3 கோடி சாலை வரி கட்ட வேண்டியிருந்தது.  அவற்றை எப்படியே பலரிடம் கடன் வாங்கி, சொத்துகளை அடமானம் வைத்து கட்டினார்.  சாலை வரியினால் இவர் பெரும் இடர்பாடுகளை சந்தித்தார்.  ஆனால் வரும் ஆண்டுகளில் அதிலிருந்து மீண்டு வருவேன் என்று சொல்கிறார்.

இவர் தொழில் முனைவோருக்கு தரும் அறிவுரை, ‘கடினமாக உழையுங்கள், எளிமையாக இருங்கள், மற்றவை அனைத்தும் அதிர்ஷ்டம்தான்’.

Courtesy: The article was originally published by: YourStory.com

Image Courtesy: YourStory.com

Sunday 4 May 2014

, , , , , , ,

அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்

அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள், இந்த புத்தகத்தை எழுதியவர் ஸ்டீபன் கவே.  ஆங்கிலத்தில் ‘The 7 Habits of Highly Effective People’ என்ற பெயரில் வெளியான இந்த புத்தகத்தை தமிழிலில் மொழி பெயர்த்துள்ளனர்.  சுமார் இரண்டு கோடி பிரதிகளுக்கும் மேலாக விற்றுள்ள சுய முன்னேற்ற புத்தகம்.  ஆண்டுகள் பல ஆன பிறகும் இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளும் உத்திகளும் இன்றும் தொழில் முனைவோர் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.


இந்த புத்தகம் எவ்வாறு இரண்டு மனிதர்களின் பார்வைகள் வேறுபடுகிறது என்று அறிமுகப் படுத்துகிறது.  இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஸ்டீபன் கவே, ஒருவர் திறமையாக மாறுவதற்க்கு எவ்வாறு அடுத்தவரை சார்ந்திராமல் சொந்தமாக முடிவேடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார்.

இந்த புத்தகம், நீங்கள் அதிக ஆற்றல் பெறுவதற்க்கு ஏழு பழக்கங்களை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றி சொல்லுகிறது.  முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி பில் கிளிண்டன் அவர்கள் இந்த புத்தகத்தை படித்து அதில் கூறப்பட்டுள்ள பழக்கங்களை தன் வாழ்நாளில் அவர் ஜனாதிபதியாக இருந்தபோது கடைப்பிடித்து சிறப்பாக வழி நடத்தினார்.

ஆசிரியரைப் பற்றி

ஸ்டீபன் ரிச்சர்ட்ஸ் கவே ஒரு அமெரிக்க எழுத்தாளர், தொழிலதிபர், பேச்சாளர் மற்றும் சுய முன்னேற்றத்திற்க்கான பயிற்சி அளிப்பவராகவும் இருந்திருக்கிறார்.  இவர் இது தவிர பல சுய முன்னேற்ற நூல்களையும் எழுதியிருக்கிறார். 


புத்தகத்தைப் பற்றி
  • ஆசிரியர்:  ஸ்டீபன் ரிச்சர்ட்ஸ் கவே (தமிழிலில்: நாகலட்சுமி சண்முகம்)
  • பதிப்பாளர்: மஞ்சூல்
  • பக்கங்கள்: 512 பக்கங்கள்
  • விலை: Rs.228/- 
குறிப்பு: புத்தகம் வேண்டுவோர் மேலே உள்ள லிங்கை பயன்படுத்தி வாங்கலாம் அல்லது இங்கே கிளிக் செய்து படிவத்தை நிரப்பியும் பெறலாம்.