Thursday 23 October 2014

, , , ,

இரயில் கட்டணத்தை தவணை முறையில் (EMI) செலுத்துங்கள் IRCTC இல்

இனி அதிகமாகி வரும் இரயில் கட்டணங்களை பற்றி கவலைப்பட வேண்டாம்.  இரயில் கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் வசதியை இந்திய இரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.  இவ்வசதி ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டும் பொருந்தும்.


இந்திய இரயில்வே பல சிறப்பு விடுமுறை கால இரயில்களை அறிமுகப் படுத்தியிருக்கிறது.  இவற்றில் பயணம் செய்வதற்க்கு அதிக கட்டணம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.  இதனால் நடுத்தர மக்கள் இவற்றை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது.  இந்த EMI வசதிமூலம் அது சாத்தியமாயிருக்கிறது.

ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது, கட்டணம் செலுத்தும் விருப்பத்தை தேர்ந்தெடுக்கும் போது, EMI என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து அதன் வழியாக கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) மூலம் இந்த வசதியை பெறலாம்.  முன்பதிவிற்க்கான கட்டணம் முழுவதும் கிரெடிட் கார்டிலிருந்து கழிக்க படும்.  பின்பு அது மாதா மாதம் வங்கியிலிருந்து தவணை முறையில் எடுத்துக் கொள்ளப்படும்.

தற்போது இந்த வசதி சிட்டி பேங்க் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமெ உள்ளது.  மேலும் இனி வரும் நாட்களில் இவ்வசதி மற்ற கிரெடிட் கார்டுகளுக்கு விரிவுப்படுத்த படலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

Source: Trak.in Image: wikimedia.org

Thursday 16 October 2014

,

தொழிலில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும் மற்றும் தடுக்கும் இரண்டு முக்கிய வழிமுறைகள்

நீங்கள் உங்கள் தொழிலில் ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு கையாளுகிறீர்கள்?  உங்களுக்கு வரவேண்டிய பணம் தாமதமாகிறதா? அல்லது உங்கள் தொழிலில் வேறு எதாவது சிக்கல்கள் இருக்கிறதா?

நீங்கள் ஏற்கனவே தொழில் நடத்துபவராயின் இந்த பிரச்சனைகளை எதிர் கொண்டு இருக்கலாம்.  அல்லது புதிதாக தொழில் தொடங்குபவராயின் அவற்றை பற்றி கேள்விப் பட்டிருக்கலாம்.  எவ்வாறாயினும் அப்பிரச்சனைகளை எவ்வாறு கையாளுவது என்பது பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  அவ்வாறு இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி?  தெரிந்து கொள்ளுங்கள்.

ஓன்று: நீங்கள் வணிக ஒப்பந்தங்கள் போடும் போது முன்கூட்டியே பின்வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒப்பந்தங்கள் போடுங்கள்.  ஒப்பந்தம் போடும் போது உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ப பேச்சுவார்த்தை நடத்துங்கள்.  இந்த ஒப்பந்தங்கள் மிகவும் முக்கியமானவை.  பின்னால் இவற்றால் வரும் நன்மை தீமைகளுக்கு நாம் பொறுப்பாக நேரிடும்.  ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது நன்மைகளை மட்டும் பாராமல் அனைத்து வகையான தீமைகளையும் ஆராய்ந்து அதற்கு ஏற்ப ஒப்பந்தங்களை தயார் செய்யுங்கள்.


இரண்டு: பொதுவாக தொழில்களில் கடனுக்கு விற்பனை செய்வது இயல்பான ஒன்று.  ஆனால் அந்த கடனை வசூலிப்பது அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை.  விற்பனைகளுக்கான தொகையை வசூலிக்கும் முறைகளை வழிமுறைப் படுத்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு சட்டத்தின் கீழ் செயல் முறைகள் உள்ளன.  இதன் மூலம் உங்கள் விற்பனைக்கான தொகையை எந்த வித சிரமுமின்றி வசூல் செய்யலாம்.  கடன்களை சரியாக கட்டவில்லை என்றால் இந்த சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.  கூறிப்பிட்ட நேரத்தில் கட்ட தவறிய கடன் மீது வட்டி மற்றும் அபராத தொகை விதிக்க முடியும்.  இது பல தொழில் முனைவோர்களுக்கு தெரிவதில்லை.  இது பற்றி மேலும் அறிந்து கொள்ள அருகிலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு ஆணைத்தை (MSME) தொடர்பு கொள்ளவும்.

Sunday 31 August 2014

, ,

கி.மு. கி.பி. ஒரு பிளாஷ்பேக்

நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் வரலாறு பாடங்கள் நடக்கும் போது தூங்கியது உண்டு.  இதற்கு முக்கிய காரணம், ஒன்று வரலாறு பாடப் பிரிவு எப்போதும் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தொடங்கும் வகுப்பாக இருக்கும் அல்லது வரலாற்று பாடங்கள் சுவாரசியமாக எழுதப்படவில்லை அல்லது அவற்றை நடத்தும் ஆசிரியர்கள் அவற்றை அழகாக எடுத்துரைக்கவில்லை.  காரணம் எதுவாயினும் வரலாறு நமக்கு எப்போது சுவாரசியமாகப் படவில்லை.


ஆனால் காலம் செல்ல செல்ல வரலாற்றின் மீது ஏனோ அதீத ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.  அதனால் அது சம்மந்தப் பட்ட புத்தகங்களை தேடி தேடிப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  அப்படி என் கண்ணில் பட்ட புத்தகம் தான், கி.மு. கி.பி.  முதல் பதிப்பாக 2006 ல் மதன் எழுதி வெளிவந்த இப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பை (2009) படித்தேன்.  

சுமார் 200 பக்கங்களுக்குள் ஆசிரியர் கி.மு வையும் கி.பி யையும் அடக்க முயன்றிருக்கிறார்.  உலகம் தோன்றியது, மனிதன் உருவாகியது முதல் தொடங்குகிறது இந்த புத்தகம்.  அதன் பிறகு சற்றே பயணித்து நாகரிகங்கள் வளர்ந்ததை விளக்குகிறது புத்தகம்.  

ஏதென்ஸ், கிரேக்கம் மற்றும் பாரசீகம் வரை சென்று இந்தியாவின் அசோகரின் கலிங்கத்து போரை நினைவு கூறும் ஆசிரியர் அழகான எளிமையான நடைமுறை தமிழிலில் விவரித்து இருக்கிறார்.  வரலாறு என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அசோகர், சந்திரகுப்தர், சாணக்கியர்.  அவர்களையும் தாண்டி இந்திய எல்லைகளை தாண்டி உள்ள நாடுகள் பலவற்றிலும் நடந்த வரலாற்று நிகழ்வுகளை கண் முன்னே காட்டுகிறார் ஆசிரியர்.

ஒருவேளை வரலாறை உங்கள் வகுப்புகளில் தவற விட்டிருந்தால் இந்த புத்தகம் உங்களை மீண்டும் அதை படித்து ருசிக்க உதவும்.  


புத்தகத்தைப் பற்றி
  • ஆசிரியர்:  மதன் 
  • பதிப்பாளர்: கிழக்கு பதிப்பகம்
  • பக்கங்கள்: 192 பக்கங்கள்

Tuesday 29 July 2014

, , ,

உங்கள் தொழிலின் முதலீட்டிற்க்கு ஐந்து வழிகள்

நீங்கள் தொழில் செய்வதற்க்கு முக்கியமானது முதலீடு.  உங்களுடைய தொழில் யோசனை எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் உங்களிடம் அதற்க்கான முதலீடு இல்லையென்றால் என்ன பயன்பொதுவாக தொழில் தொடங்குவது என்பது சாதாரணமான விஷயம் இல்லைஅதற்கு பெரும்பாலும் தடையாக இருப்பது மூலதனம்சேர்த்து வைத்த பணம் அல்லது வங்கிகளின் கடன் தான் பெரும்பாலும் மூலதனத்திற்க்கு ஆதாரமாக விளங்குகின்றனஆனால் எல்லோராலும் பணத்தை சேர்த்து வைத்து தொழில் தொடங்க முடியாமல் போகலாம்வங்கிகள் தரும் கடன் தான் தொழில் முனைவோர்களுக்கு மிகப்பெரிய பக்க பலம். ஆனாலும் எல்லோராலும் வங்கியில் எளிதாக கடன் பெற முடிவதில்லைஎனினும் வங்கிகள் தவிர பல வழிகளில் உங்கள் தொழிலுக்கு மூலதனத்தை திரட்டலாம் என்று உங்களுக்கு தெரியுமா



உறவினர்கள் மற்றும் நண்பர்கள்

உங்களுடைய தொழிலுக்கு முதல் பக்க பலமாக இருப்பது உங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்தான்நீங்கள் தொழில் தொடங்குவது என்று முடிவெடுத்து விட்டால் முதலில் அணுக வேண்டியது உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களைதான்

உங்கள் தொழில் குழந்தை முதல் காலடி எடுத்து வைப்பது இவர்களின் கைப்பிடித்துதான். உங்களுடைய தொழிலைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரையுங்கள்முடிந்தால் அவர்களையும் உங்கள் தொழிலின் ஒரு பார்ட்னராக ஏற்று கொள்ளுங்கள்ஆனால் ஒரு விஷயம், அவர்களின் இந்த முதலீன் உங்களின் நட்பு அல்லது உறவை கெடுக்கக் கூடியதாக இருக்க கூடாதுஅவர்கள் உங்களுக்கு உதவ தயாரா? ஒரு வேளை நஷ்டம் வந்தால் அவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்று பாருங்கள்ஏனென்றால் கடன் அன்பை மட்டுமல்ல சில சமயம் எலும்பையும் முறிக்கும்.

வணிக ஊக்கிகள் (Business Incubaros)

வணிக ஊக்கிகள் எனப்படுபவர்கள் உங்கள் தொழிலுக்கு முதல் மூலதனம் தருவதோடு நின்றுவிடாமல் உங்கள் தொழிலுக்கு தேவையான அத்தனை ஆலோசனைகளையும் வழங்குவார்கள்.  இவர்கள் அனைவரும் தொழில் வல்லுனர்கள்.  ஆகையால் இவர்கள் உங்கள் தொழில் முதலீடு மற்றும் அதன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள்.

முன்னுரிமை பங்குதாரர்கள்

முன்னுரிமை பங்குதாரர்கள் உங்கள் தொழிலில் வரும் இலாபத்தை முதலில் பங்கு போட்டுக் கொள்ளும் உரிமையாளர்கள்.  இவர்களுக்கு தொழிலின் மூலம் கிடைக்கும் இலாபத்தை ஒரு குறிப்பிட்ட நிலையான சதவீகிதத்திற்க்கு எடுத்து கொள்ளுவார்கள்.  எந்த ஒரு பெரிய தொழிலின் முதல் மூலதனம் இவர்களுடையதாய் இருக்கும்.  இதன் மூலமே பல தொழில்கள் மேலும் வளர்ச்சி அடைய முடியும்.

மாற்றத்தக்க கடன் பத்திரம்

சமீப ஆண்டுகளில் மிகவும் பிரபலமாக இருப்பது இந்த மாற்றத்தக்க கடன் பத்திரங்கள்.  அதாவது கடன் கொடுப்பவர்கள் சிறிது காலத்திற்க்கு பிறகு நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொழிலில் பங்கு தாரர்கள் ஆவார்கள்.  இதுதான் மாற்றத்தக்க கடன் பத்திரம் என்பது.  இந்த முறையிலும் நீங்கள் உங்கள் தொழிலுக்கான முதலீட்டை பெறலாம்.

துணிகர முதலீடு


துணிகர முதலீடு அல்லது ஆங்கிலத்தில் வென்சர் கேப்பிடல் மூலமும் உங்கள் தொழிலுக்கான முதலீட்டை பெறலாம்.  இந்த துணிகர முதலீடுப் பற்றி இங்கே விரிவாக கொடுத்துள்ளோம்.

English Summary:

You can fund your business in various ways.  There are five important ways that you can seek fund for your business.  These are: Family and Friends, Business Incubators, Preference Shares, Convertible Debentures and Venture Funding.

Image & Souce Courtesy: Yourstory.in

Tuesday 17 June 2014

,

இந்திய பொறியாளர்களுக்கு வெளிநாடுகளில் வேலை - இந்தியாவின் வாஷிங்டன் உடன்படிக்கை

பொறியாளர்களை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  இந்திய பொறியாளர்களின் திறமை உலகம் முழுவது அறியப்பட்ட ஒன்று.  இப்போது இது உலக அளவில் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.  இதற்கு காரணம், இந்தியா வாஷிங்டன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருக்கிறது.  இதன் மூலம் இந்திய பொறியாளர்கள் உலகம் முழுவதும் வேலைக்காக விண்ணப்பம் செய்ய முடியும்.  அவர்கள் வளர்ந்த நாடுகளில் அதிக சம்பளம் பெற முடியும்.  இந்தியா இந்த உடன்படிக்கையில் ஒரு அங்கமாக ஆகுவதற்கு சில ஆண்டுகளாக முயற்சி செய்து வந்திருக்கிறது.  இதன் மூலம் இந்தியா உலக நாடுகளில் இந்த சலுகையை பெற்ற 17 ஆவது நாடாக ஆகிறது.

வாஷிங்டன் உடன்படிக்கை என்றால் என்ன?

வாஷிங்டன் உடன்படிக்கை ஒரு தொழில்முறை பொறியியல் பட்டப்படிப்பை சர்வதேச அளவில் அங்கீகாரம் செய்யும் ஒப்பந்தம்.  இது தொடங்கப்பட்ட ஆண்டு 1989.  பின்வரும் நாடுகள் இந்த பிரத்யேக மன்றத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றன: ஆஸ்திரேலியா, கனடா, சீன தைபே, ஹாங்காங், சீனா, அயர்லாந்து, ஜப்பான், கொரியா, மலேஷியா, நியூசிலாந்து, ரஷ்யா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா.


இதன் மூலம் இந்தியாவில் பொறியியல் படிப்பு, இதில் மன்றம் வகிக்கும் நாடுகளில் அங்கீகரிக்கப் படும்.  இதன் மூலம் இந்த நாடுகளில் உள்ள பொறியியல் வேலைகளுக்கு இந்திய பொறியாளர்கள் விண்ணப்பிக்க முடியும்.  இது முன்பு மிகவும் கடினமாக இருந்தது.

இந்தியாவில் இருக்கும் அனைத்து பொறியியல் படிப்புகளும் இதில் அடக்கமா?

இந்த உடன்படிக்கையில் ஐ.டி பொறியாளர்கள் மற்றும் சாப்ட்வேர் பணியாளர்களுக்கு இடம் இல்லை.  மேலும் இந்தியாவில் பயிலப்படும் அனைத்து பொறியியல் படிப்புகளும் இதில் அடக்கம் இல்லை.  தற்போது மொத்தம் 220 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே இதில் அடக்கம்.  மேலும் இந்த 220 கல்லூரிகளும் வாஷிங்டன் உடன்படிக்கையில் புதியதாக விண்ணப்பிக்க வேண்டும்.  இதன் மூலம் பயிலப்படும் படிப்புகள் மீண்டும் மற்ற 16 நாடுகளுக்கு நிகராக வடிவமைக்கப்படும்.

உதாரணத்திற்கு, இந்த 16 நாடுகளில் பயிலப்படும் பொறியியல் படிப்புகளில் சமூக அறிவியல் ஒரு பெரிய பாடமாக உள்ளது.  அதனால் இந்தியாவில் பயிலப்படும் பாடங்களில் சமூக அறிவியலையும் ஒரு பாடமாக இணைக்க வேண்டும்.  இது போல பல மாற்றம் செய்த பின்னரே இந்த உடன்படிக்கை மூலம் பலனை அடைய முடியும்.

இந்த மாற்றத்திற்க்கு சில காலம் ஆகலாம்.  ஆனால் இவை ஒழுங்கு படுத்தப்பட்ட பிறகு இதன் மூலம் இந்திய பொறியாளர்கள் மிகுந்த நன்மை அடைய முடியும். 

இப்போது இந்திய பெற்றோர்கள், பொறியியல் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க ஒரு காரணம் கிடைத்துவிட்டது!

Image & Source: Trak.in

English Summary: India joining Washington Accord and Indian Engineers have chance to smile as they can get jobs in developed countries who are the part of this accord. 

Sunday 15 June 2014

, , ,

தொழிலில் சவால்களை சமாளித்து வெற்றி பெற சாம் வால்டனின் 12 விதிகள்

நீங்கள் வால் மார்ட் பற்றி கேள்வி பற்றி இருப்பீர்கள்.  வால் மார்ட் உலகத்தில் உள்ள பெரிய நிறுவனங்களின் ஒன்று.  சூப்பர் மார்க்கெட்டில் புரட்சி ஏற்படுத்திய ஒரு நிறுவனம்.  இந்த நிறுவனத்தை நிறுவியவர் சாம் வால்டன்.  அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில் அதிபர்.  அவர் கடைப்பிடித்த தொழில் விதிகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.  அவற்றை பின்பற்றி நீங்களும் உங்கள் தொழிலில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  1. பாரம்பரிய மதிநுட்பத்தை புறம் தள்ளுங்கள்.  புதிதாக சிந்தியுங்கள். உங்கள் தொழிலில் இருக்கும் அனைவரும் ஒரே மாதிரியான முறையை கடைப்பிடித்தால், நீங்கள் மாற்றி யோசியுங்கள்.  உங்கள் தொழிலில் புதிய முறையை புகுத்துங்கள்.  நீங்கள் வெற்றி பெறுவது நிச்சயம்.
  2. எப்போதும் உயர்ந்த குறிக்கோளை கொண்டிருங்கள். போட்டியை ஊக்குவியுங்கள். முன்னேறுங்கள்.
  3. நீங்கள் உங்கள் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் பணியாளர்களின் நலனுக்காக இந்த தொழிலை நடத்துகிறீர்கள் என்ற எண்ணத்தை அவர்களிடம் உருவாக்குங்கள்.  அவர்கள் உங்களுக்காக வேலை செய்கிறார்கள் என்று அவர்களை எண்ண வைக்காதீர்கள்.
  4. அதிக எதிர்ப்பார்ப்புதான் உங்கள் வளர்ச்சிக்கு உதவும்.
  5. வாடிக்கையாளர்தான் உங்கள் முதலாளி.  அவர் நினைத்தால் தனது பணத்தை மற்றவர்களுக்காக செலவிட்டு உங்களை மேலிருந்து தரையிறக்க முடியும். 
  6. உங்கள் தொழிலை பொறுப்புணர்ச்சியோடு செய்யுங்கள்.  மற்றவர்களை விட நீங்கள் உங்கள் தொழிலின் மீது நம்பிக்கை வையுங்கள்.
  7. உயர்ந்த தலைவர்கள் தங்களுக்காக வேலை செய்யும் பணியாளர்களின் சுயமரியாதையை உயர்த்துவார்கள்.  சுயமரியாதையுடன் நடத்தப்படும் பணியாளர்கள்தான் உங்கள் சொத்து.  அவர்கள் உங்களுக்காக எதையும் சாதிப்பார்கள்.
  8. முதலீடு குறைவாயிருப்பதை பொருப்படுதாதீர்கள்.  உங்கள் கனவு தான் குறைவாக இருக்க கூடாது.
  9. உங்கள் தொழிலை நீங்கள் விரும்பி செய்தால், தினந்தோறும் அதை திறம்பட செய்ய முயலுவீர்கள்.  இந்த பழக்கம் உங்களுடைய பக்கத்திலிருப்பவருக்கும் பற்றிக் கொள்ளும்.
  10. சரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, சரியான நேரத்தில் சொல்லப்பட்ட, உண்மையான பாராட்டுக்கு முன்னால் எதுவுமே நிகர் இல்லை.  அது இலவசங்களில் ஒன்று ஆனால் அதிர்ஷ்டம் கொடுக்கும் மதிப்பு மிகுந்தது.
  11. உங்களை நீங்களே தீவிரமாக்கி கொள்ளாதீர்கள். எப்போதும் தளர்வாயிருங்கள். உங்களை சுற்றியிருப்பவர்களும் அதைப் போலவே மாறுவார்கள்.  ஆனந்தமாக இருங்கள்.
  12. அதிக அனுபவமில்லாத, வேலையே தெரியாத ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்க நேரிட்டால், அவர் நீங்கள் கொடுக்கும் வேலை எதுவானாலும் எப்படியாவது செய்து முடிக்கும் ஆர்வம் இருந்தால், அப்படிபட்டவர் எப்படியாவது திறைமையாகவும் அதன் மூலம் அனுபவசாலியாகவும் ஆகிவிடுவார்.  இது பத்தில் ஒன்பது முறை நிருபனமாயிருக்கிறது.
Image & Source: YourStory.com

Saturday 14 June 2014

, , ,

LocalBanya (லோக்கல் பன்யா) - ஆன்லைன் மளிகை கடை

இணையம் மூலம் பொருள்களை வாங்குவது அதிகரித்திருக்கும் இந்த காலத்தில், மின்னனு பொருள்கள், புத்தகங்கள், ஆடை அணிகலன்கள் தவிர இப்போது மளிகை பொருள்கள் விற்கும் அளவிற்க்கு இது விரிவடைந்திருக்கிறது.  அவ்வழியில் மளிகை பொருள்களை விற்கும் இணைய வணிகதளம் லோக்கல் பன்யா (Local Banya) ஒரு நாளைக்கு 600 ஆர்டர்களை கையாளுகிறது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தில் இப்போது சுமார் 8000 மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யப் படுகிறது.  இந்நிறுவனத்தில் 100 க்கும் மேற்ப்பட்டோர் வேலை பார்க்கின்றனர். 


இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முதல் காரணம் நேரம் தவறாமை.  குறித்த நேரத்தில் பொருள்களை வாடிக்கையாளர்களின் இடம் சென்று சேர்ப்பது இவர்களது வெற்றிக்கு ஒரு முதன்மையான காரணம்.  மேலும் பொருள்களை வாங்கிய பின்பு செய்து தரும் சேவையும் ஒரு காரணம்.  இது இவர்களது தலையாய குறிக்கோளும் கூட.  ஏனென்றால் மளிகைப் பொருள்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்வது மிகவும் முக்கியம்.  அதுவும் எளிதில் அழுகும் பொருள்களான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சரியான நேரத்தில் சென்று சேர்க்க வேண்டும். 

இந்த முயற்சி இவர்களுக்கு இந்த வெற்றியை தேடி தந்திருக்கிறது.  சரக்கு போக்குவரத்து மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகிய இவை இரண்டும் இவர்களது மிகப் பெரிய தூண்கள். 

ஒரு ஆர்டர் சராசரியாக Rs.1350/- க்கு விற்பனையாகிறது.  இவற்றில் மளிகைப் பொருள்களின் சதவிகிதம் 22 ஆகவும், தினசரி பொருள்கள் மற்றும் வீட்டிற்க்கு தேவையான பொருள்களின் முறையே ஒவ்வொன்றும் 11 சதவிகிதமாகவும், காய்கறிகள் மற்றும் பழங்கள் 11 சதவிகிதமாகவும் உள்ளது.

இந்நிறுவனம் லாபம் மற்றும் நஷ்டமில்லாத சமநிலைபுள்ளியை வரும் ஜூலை 2014 லில் அடையும் என எதிர்ப்பார்க்க படுகிறது.  இந்நிறுவனம் தனது செயல்பாட்டை மேலும் விரிவுப்படுத்த இருக்கிறது.  இதற்க்காக சுமார் ஐந்து மில்லியன் டாலருக்கு நிதியை திரட்ட திட்டமிட்டிருக்கிறது. (LocalBanya.com)

Source: YourStory.com

Monday 26 May 2014

உலக கால்பந்து போட்டி: தகவல்கள்-1

இன்னும் சில வாரங்களில் தொடங்க போகும் உலக கால்பந்து போட்டியை உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.  உலக கால்பந்து போட்டி, பெடரேஷன் இன்டர்னேஷனல் தி புட்பால் அசோசியேஷன் என்ற அமைப்பின் மூலம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப் படுகிறது.  இது இப்போது கால்பந்து ஆட்டத்திற்க்கு பெயர்போன பிரேசிலில் ஜுன் மாதம் 13 ஆம் தேதி தொடங்குகிறது.  உலக கால்பந்து போட்டி பற்றிய சில தகவல்களை தொடர்ந்து இந்த ‘தமிழ் இதழ்’ லில் காணலாம்.


முதல் உலக கால்பந்து போட்டி நடைப்பெற்ற ஆண்டு 1930.  இந்த போட்டி உருகுவே நாட்டில் நடத்தப்பட்டது.  மொத்தம் 13 நாடுகள் மட்டுமே பங்கேற்றன.  இதில் வெற்றி பெற்றதும் உருகுவே நாடுதான்.  முதல் போட்டி உருகுவேவில் நடத்தப் பட்டதற்க்கான காரணம், அப்போது 1924 மற்றும் 1928 ஆண்டுகளில் உருகுவே ஒலிம்பிக்கில் கால்பந்து போட்டியில் தங்க பதக்கங்களை வென்றிருந்தது. மேலும் அது தனது 100 வது சுதந்திரதினத்தை 1930 ஆம் ஆண்டு கொண்டாட இருந்தது.  இதனால் முதல் உலக கால்பந்து போட்டி உருகுவேவில் நடத்துவது என்பது தீர்மானமானது.

ஆனால் உருகுவே நாடு, தென் அமெரிக்காவில் இருந்ததால் பல ஐரோப்பிய நாடுகளுக்கு அப்போதைக்கு இருந்த போக்குவரத்தின் வசதி குறைவு காரணமாக இந்த போட்டியில் பங்கேற்க முடியவில்லை.  இதனால் மெத்தம் 13 நாடுகள் மட்டுமே பங்கு கொண்டன.

அதன் பிறகு 1934 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைப்பெற்ற உலக கால்பந்து போட்டியில் உருகுவே பங்கேற்கவில்லை.  உருகுவே ஐரோப்பிய நாடுகளுக்கு பதிலடியாக இந்த முடிவை எடுத்தது.  ஆனால் இதற்கு உருகுவே பணப்பற்றாகுறையை காரணமாக சொன்னாலும், ஐரோப்பிய நாடுகள் 1930 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் கலந்து கொள்ளாததே முதற் காரணமாக பட்டது.

இதனால் வெற்றி பெற்ற அணி அடுத்த போட்டியில் பதக்கத்தை தக்க வைக்க கலந்து கொள்ளாத முதல் மற்றும் கடைசி நாடாக உருகுவே வரலாற்றில் இடம் பெற்றது.

Image Courtesy: Wikipedia

Wednesday 14 May 2014

, , , , ,

மேரிகார்.காம் (MeriCAR.com) உங்களை பணம் சம்பாதிக்க அழைக்கிறது

இந்தியாவில் தனிநபர் வருமானம் அதிகரித்திருப்பதால் இன்று ஒவ்வொரு வீட்டின் முற்றத்திலும் நீங்கள் கார்களை பார்க்கலாம்.  குறைந்த பட்சம் ஒரு சிறிய காரையாவது ஒவ்வொருவரும் வாங்க ஆசை படுகின்றர்.  இதனால் இன்று கார்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு போகிறது. கார் வைத்திருப்பவர்கள் அவற்றை பராமரிப்பதற்க்கு சிரம பட வேண்டியிருக்கிறது.  இதற்கு காரணம் அவர்களால் சரியான பாரமரிப்பு நிலையத்தை கண்டறிய முடிவதில்லை.  அதற்கு அவர்களுக்கு நேரமும் போதவில்லை.  இதனால் கார்களின் தரம் நாளுக்கு நாள் பாதிப்படைகிறது.  இதற்கு தீர்வாக வந்திருப்பதுதான் மேரிகார்.காம் (MeriCAR.com).


மேரிகார்.காம் டில்லியை தலைமையிடமாக கொண்ட கார் வொர்க் ஷாப்ஸ் மற்றும் கார்களை பராமரிக்கும் நிலையங்களை தனது தகவல் பெட்டகத்தில் வைத்திருக்கும் ஒரு வணிக இணையதளம்.  இதன் மூலம் உங்கள் கார்களை பராமரிக்க பராமரிப்பு நிலையங்களை உங்கள் ஊரிலேயே எளிதில் கண்டறியலாம்.  மேலும் இதன் மூலம் நீங்கள் வெறும் ஒரு அழைப்பு விடுத்தாலே போதும், பராமரிப்பு நிலையங்களிலிருந்து பணியாளர்கள் உங்கள் கார்களை உங்கள் வீட்டிற்கே வந்து எடுத்து கொண்டு சென்று மறுபடியும் உங்கள் வீட்டின் முற்றத்திற்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள்.

நீங்கள் பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு

ராகேஷ் என்பவரால் 2008 ல் ஆரம்பிக்க பட்ட இந்த நிறுவனம் இப்போது இந்தியா முழுவது இதனை விரிவுப் படுத்தி கொண்டு இருக்கிறது. இதனுடைய ’மை டிரிம், மை சிட்டி’ (My Dream, My City) என்ற திட்டம் மூலம் ஒவ்வொரு நகரிலும் தனது மையத்தை நிறுவ உள்ளது.  இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளது. 

ராகேஷ் சொல்கிறார், ‘நாங்கள், தொழில்கள் முனைவோர்களை எங்களுடன் இணைய அழைக்கிறோம், அவர்கள் எந்த தொழிலிலும் ஈடுபட்டு இருந்தாலும் பரவாயில்லை.  மேலும் இல்லதரசிகள், பணியிலிருந்து ஒய்வு பெற்றவர்கள், வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் மற்றும் பணம் சம்பாதிக்கும் எண்ணம் உள்ள எவரையும் எங்களுடன் இணைய அழைக்கிறோம்.  அவர்கள் தங்கள் வீட்டிலிருந்த படியே மேரிகார்.காம் வில் இணைந்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.  இதை பற்றிய தகவல்களை நீங்கள் ஆன்லைன் வீடியோக்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்’.


மேரிகார்.காம் தற்போது 10000 நபர்களை 1000 நகர்களில் இருந்து சேர்க்க திட்டம் கொண்டுள்ளது.  இவர்களுடன் பார்ட்னராக சேர்பவர்கள் மூலம் தனது கார் பாராமரிப்பு நிலையங்களை நிறுவ உள்ளது.  இதன் மூலம் பார்ட்னராக சேர்பவர்கள் தனக்கான பங்கை பெறலாம்.

சொந்த தொழில் செய்பவர்கள், கார் இன்சூரன்ஸ் ஏஜண்ட்டுகள் மற்றும் வீட்டிலிருந்த படியே பணம் சம்பாதிக்க நினைபவர்கள் உதிரி வருமானம் பெற இவர்களுடன் சேரலாம்.  கார் தொழில்களை பற்றிய முன் அனுபவம் தேவையில்லை. 

மேரிகார்.காம், தனியுரிம வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை மென்பொருளை தனது பார்ட்னர்களுக்கு வழங்கி எவ்வாறு தொழிலை விரிவிப்படுத்துவது என்பது பற்றி விளக்கும்.  இதன் மூலம் மூன்று நான்கு மாதங்களில் மாதம் ரூபாய் 50000 முதல் 100000 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்கிறது.  மேலும் அதன் பிறகு இத்தொழிலை முழு நேரமாக செய்பவர்கள் இதை விட இரண்டு மூன்று மடங்கும் சம்பாதிக்க வாய்ப்புள்ளதாக இந்நிறுவனம் சொல்கிறது.

தொழில் உதாரணம்

கார் உரிமையாளர்கள் MeriCAR.com என்ற இணையதள முகவரி மூலமாகவோ அல்லது MeriCAR ஹெல்ப்லைன் கால் சென்டர் மூலமாக தங்களது காரை பராமரிக்க பதிவு செய்து கொள்ளலாம்.  இந்நிறுவனத்தின் ஊழியர்கள் கார் உரிமையாளர்களுக்கு தங்களது பகுதியில் இருக்கும் பராமரிப்பு நிலையங்களை பற்றிய விவரங்களை தருவார்கள்.  கார் பராமரிப்பு நிலையங்கள் தரும் கமிஷன் தான் இந்நிறுவனத்தின் வருமானம்.  இதுவரை சுமார் 13000 க்கும் அதிகமான கார்களை மேரிகார்.காம் பதிவு செய்துள்ளது.


இது ஒரு B2B மாடல். கார் பராமரிப்பு நிறுவனங்கள் தங்களை இந்த இணையதளத்தில் இணைத்து கொள்வதின் மூலம் தங்களுக்கு அதிகமான வருமானம் கிடைக்கிறது.  மேலும் இந்நிறுவனம் கார் உரிமையாளர்களுக்கு உத்திரவாதம், பாதுகாப்பும் வழங்குகிறது.   

தொடர்ந்த திருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் மூலம் இத்தொழில் மேலும் வளர்கிறது.  மேலும் கார் உரிமையாளர்கள் இதன் மூலம் பெரும் பணத்தை மிச்ச படுத்த முடிகிறது.  இந்நிறுவனம் தயாரித்துள்ள சாப்ட்வேர் மூலம் பார்ட்னர்கள் மேரிகார்.காம் விற்கு கார்களை பதிவு செய்வதிலிருந்து, அவற்றை கண்காணிப்பது மற்றும் நிர்வகிப்பது வரை செய்ய முடியும்.  இதன் மூலம் அவர்கள் கமிஷன் பெற முடியும்.  கார் பராமரிப்பு நிலையங்களும் இந்த சாப்ட்வேரை பயன் படுத்தி தங்களது தொழிலை விரிவு படுத்த முடியும்.

இதில் பார்ட்னராக எவ்வாறு விண்ணப்பிப்பது

இந்நிறுவனத்தில் பார்ட்னராக முதலில் கீழ்வரும் லிங்கை பயன்படுத்தி அதில் வரும் பகுதியில் தங்களை பற்றிய விவரம் மற்றும் தாங்கள் தொடங்க விரும்பும் இடம் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும்.  இதன் மூலம் இதன் அடிப்படை பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும்.  மேலும் தகவல்கள் பெற விரும்பினால் அதற்க்காக சிறப்பு கோரிக்கை தர வேண்டும்.

Summary:

Mericar.com is an online portal that helps the users (car owners) to choose the best car service centers nearby their home.  All the car service centers are well verified and trustworthy.  Car owners thereby reduce their cost and timing.  Now, Mericar.com calls for partners through which anyone can earn handsome income from their home, in their leisure time.   Retired persons, housewives, small entrepreneur, students and anyone who wants to earn extra or full income can opt for this offer.


Courtesy: Source and Image: yourstory.com

Tuesday 13 May 2014

, , ,

மோட்டோரோலா அறிமுகப் படுத்துகிறது மோட்டோ E (Moto e): Rs.6999/-

மோட்டொரோலா சமீப காலமாக குறைந்த விலையுள்ள மற்றும் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மொபைல் போன்களை அறிமுகப் படுத்திவருகிறது.  அந்த வகையில் இன்று அது அறிமுகப் படுத்தியிருக்கும் மொபைல் போன் மோட்டோ E (Moto e).  இதன் விலை ரூபாய் 6999/- மட்டுமே.  இந்த சிறப்பம்சங்களை கொண்ட மொபைல் போன்களை விட இதன் விலை குறைவே.  இதன் சிறப்பம்சங்களை காணலாம்.


டிஸ்ப்ளே (Display)

மோட்டோ E, மிகவும் தெளிவான காட்சியமைப்பை கொண்டுள்ளது.  இதன் டிஸ்ப்ளே கார்னிங்® மற்றும் கொரில்லா® அம்சங்கள் மூலம் பாதுகாக்க பட்டுள்ளது.  இதனால் இதன் பாதுகாப்பு மற்றும் நீடித்த ஆயுள் உறுதிப்படுத்தப் படுகிறது. இது ஒரு நீர் எதிர்ப்பு ஸ்பிளாஸ் பாதுகாப்பு கொண்டு பாதுகாக்கப் படுகிறது.  இதனால் தண்ணீர் பட்டாலும் போன் சேதமடையாது.  இதன் திரை (Display) அளவு 4.3 அங்குலம்.

பேட்டரி

இதன் பேட்டரி 1980 mAh திறன் கொண்டது.  இதனால் இதன் பேட்டரி 24 மணி நேரத்திற்க்கு தங்கும் திறன் கொண்டது.

சமீபத்திய ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் மற்றும் புதுப்பித்தல் உத்தரவாதம்

இது ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4 என்ற சமீபத்திய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ளது.  இதன் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் மொபைலில் பல வேலைகளை செய்யலாம்.  மேலும் அதிவேக காட்சி அமைப்புகள், ஸ்மார்ட் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளையும் விரைவாக செய்யலாம்.  கூகிள் வாய்ஸ் மூலம் நீங்கள் போனை தொடாமலேயே கால் செய்யலாம்.  கூகிள் வரைபடத்தில் தேடலாம்.  நீங்கள் மொபைலை தொடாமலேயே உங்கள் பேச்சு மூலம் மொபைலை இயக்கலாம். மேலும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இலவசமாக புதுப்பிக்கலாம்.


மற்ற சிறப்பம்சங்கள்
  • திரை அளவு (Display): 4.4 அங்குலம் கொண்ட திரை
  • ஆப்பரேட்டிங்: ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4 பதிப்பு
  • இணையயம் மற்றும் இணைப்புகள்:  இமெயில், 3G, Wifi, யூஸ்பி (USB), Bluetooth
  • வண்ணங்கள்: கறுப்பு மற்றும் வெள்ளை
  • ப்ராஸசர்: 1.2 GHz குவால்காம் ஸ்னாப் 200, இரட்டை கோர்
  • கேமரா: 5 மெகா பிக்சல் கொண்டது, வீடியோ பதிவு செய்யக் கூடியது. (ஃபிளாஷ் இல்லை)
  • மெமரி கார்ட்: உள்ளடங்கிய 4 GB மெமரி கொண்டது, வெளி மெமரி 32 GB (மைக்ரோ SD)

மற்றவை:
  • இரண்டு GSM சிம்கள் கொண்டது
  • தொடுதிரை கொண்டது
  • மியூசிக் ப்ளேயர், வீடியோ ப்ளேயர் மற்றும் FM உள்ளது

விலை:

மோட்டோ E வின் விலை ரூபாய் 6999/-, இதே சிறப்பம்சங்கள் கொண்ட மற்ற மொபைல்களைவிட இதன் விலை குறைவே.



சிறப்பு சலுகை: இந்த மொபைல் Flipkart.com என்ற வணிக தளத்தில் மட்டுமே கிடைக்கும்.  கிரெடிட் கார்ட் உள்ளவர்கள் தவணை முறையிலும் வாங்கலாம்.  இன்று (14/05/2014) இந்த மொபைலை ஆர்டர் செய்தால், Transcend 8 GB மெமரி காட்ர் 50% தள்ளுபடி விலையிலும், மோட்டோ E கவர் 50% தள்ளுபடி விலையிலும் மேலும் ரூபாய் 1000 மதிப்புள்ள மின் புத்தகங்கள் இலவசமாகவும் கிடைக்கும்.