Thursday 23 October 2014

Filled Under: , , , ,

இரயில் கட்டணத்தை தவணை முறையில் (EMI) செலுத்துங்கள் IRCTC இல்

இனி அதிகமாகி வரும் இரயில் கட்டணங்களை பற்றி கவலைப்பட வேண்டாம்.  இரயில் கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் வசதியை இந்திய இரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.  இவ்வசதி ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டும் பொருந்தும்.


இந்திய இரயில்வே பல சிறப்பு விடுமுறை கால இரயில்களை அறிமுகப் படுத்தியிருக்கிறது.  இவற்றில் பயணம் செய்வதற்க்கு அதிக கட்டணம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.  இதனால் நடுத்தர மக்கள் இவற்றை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது.  இந்த EMI வசதிமூலம் அது சாத்தியமாயிருக்கிறது.

ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது, கட்டணம் செலுத்தும் விருப்பத்தை தேர்ந்தெடுக்கும் போது, EMI என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து அதன் வழியாக கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) மூலம் இந்த வசதியை பெறலாம்.  முன்பதிவிற்க்கான கட்டணம் முழுவதும் கிரெடிட் கார்டிலிருந்து கழிக்க படும்.  பின்பு அது மாதா மாதம் வங்கியிலிருந்து தவணை முறையில் எடுத்துக் கொள்ளப்படும்.

தற்போது இந்த வசதி சிட்டி பேங்க் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமெ உள்ளது.  மேலும் இனி வரும் நாட்களில் இவ்வசதி மற்ற கிரெடிட் கார்டுகளுக்கு விரிவுப்படுத்த படலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

Source: Trak.in Image: wikimedia.org

1 comments: