Monday 17 August 2009

கவிதை

தூரம் அதிகம் என்பதில்

மகிழ்ச்சி என்றாலும்

ஒன்றாக கைக் கோர்த்து

நடக்க முடியாததில்

காதலர்களுக்கு வருத்தம்

ஒற்றையடி பாதை

கவிதை

வாசலில் வருமென
வழிமேல் விழி வைத்து
காத்திருந்தேன்
வந்தது படுக்கையறை வழியாக
மின்னஞ்சல்

மரணம்

பிறப்பை பெற்றதர்க்கு
இயற்கை கொடுத்த
இலவச இணைப்பு
மரணம்

வானவில்

மழை பெய்து ஓய்ந்ததால்
விதை விதைக்க
முதுகு வளைந்ததோ
வானவில்!

கவிதை

அன்று அவள் என் இதயத்தில்
விதையாய் விழுந்ததால்
இன்று என் கன்னங்களில்
தாடியாய் முளைக்கிறது

கவிதை

அவள் கைகளில்
தவழ்வதற்க்காகவோ
அடிக்கடி சிணுங்குகிறது
டெலிபோன்

மரம்

மண்ணில் வேரூன்றி
இருந்தாலும்
ஆகாயத்தை தொடும்
முயற்சியில்

கவிதை

என் வாழ்க்கையில்
மின்னலாய் வந்தவள்
என் நெஞ்சில் இடியாய்
காதலை மறுத்ததால்
இன்று என் கண்களில்
கண்ணீர் மழை

மனைவி

பத்து மாதம் சுமந்தாள்
பெற்ற தாய்
என்னை சாகும் வரை சுமப்பாள்
என் மகளைப் பெற்றத்தாய்

வேலை விண்ணப்பம்

வேலைக்கான இத்தனை
விண்ணப்பங்கள் விழுங்கியும்
இன்னும் பசியாறவில்லை
தபால் பெட்டியும்
இவனுடைய வயிறும்

ஓ!

பூவே, இதழ்கள் இத்தனையிருந்தும்
பேசாமல் இருப்பதேன்?
ஓ! நீ என் காதலி வீட்டுத்
தோட்டத்தின் பூவோ!

கவிதை

ஒன்று சேரமுடியாவிட்டாலும்
என்றும் ஒரே பாதையில்
நீயும் நானும்
இரயில் தண்டவாளங்களை போல!

பிறந்த நாள்

ஒவ்வொரு ஆண்டும்
வயது கூடுகிறது
ஆனால்
வாழ் நாள் குறைகிறது

பூவே உன் ஒரு நாள்

கருவில் இருந்தாய் மொட்டு என்றார்கள்
இதழ் விரித்து பிறந்தாய் மலர் என்றார்கள்
வாசனை தந்தாய் வாசலில் வரவேற்றார்கள்
வாடி நின்றாய்
இப்போது குப்பைத் தொட்டியில்

கவிதை

என்னவள் என்னிடம் மட்டும்
பேசும் மொழி
மௌனம்

கவிதை

பரிச்சயமான முகம் என்றாலும்
பார்த்துக் கொண்டே இருக்க தோன்றுகிறது
எவ்வளவு அழகாய் இருக்கிறாய் நீ,
முகம் பார்க்கும் கண்ணாடியில்

கவிதை

பின்னலில் மயங்கி
அவள் பின்னால் சென்றேன்
அவளுடைய அப்பா என்னை
பின்னி எடுத்து விட்டார்

அப்புறம்

பேச ஒன்றுமில்லாதபோது
பேச கிடைத்த ஒரே வார்த்தை
அப்புறம்

கவிதை

மீன்கள் இரண்டு தூண்டில்
போட்டதில்
மாட்டிக்கொண்டது என் இதயம்
அவளது கண்கள்

Sunday 16 August 2009

கவிதை

ஒவ்வொரு முறையும் நீ என்னைப்

பார்த்து கண் சிமிட்டும் போது

வழி தெரியாமல் தடுமாறுகிறேன்

அணைந்து அணைந்து எரியும்

தெருவிளக்கு