Monday 28 April 2014

Filled Under: ,

இந்தியாவில் பெருகும் தொழில் நிறுவனங்கள்

தொழில்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் (Minstry of Corporate Affiars) விபரங்கள் அடிப்படையில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் நிறுவனங்கள் பதிவுப் பெற்றிருக்கின்றன.  இது இந்தியாவில் எப்போதும் இல்லாத எண்ணிக்கை.

Image Credit: Trak.in

இந்த விபரத்தின் அடிப்படையில் 98,473 நிறுவனங்கள் நிறுவப்பெற்று ரூபாய் 39,000 கோடி மூலதனம் திரட்டப் பட்டிருக்கிறது.  இவற்றில் வணிக சேவைகள் தரும் நிறுவனங்கள் அதிக அளவில், 32,254 புதியதாய் நிறுவப்பட்டிருக்கின்றன.  இவற்றில் ஐ.டி. நிறுவனங்களும் அடங்கும்.

இவற்றிற்க்கு அடுத்த படியாக உற்பத்தி தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் 14,996 புதியதாய் பதியப் பெற்றிருக்கின்றன.  மூன்றாவது இடத்தில் இருக்கும் துறை ரியல் எஸ்டேட், 10,752 நிறுவனங்கள் புதியதாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. 

வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் 10646 மற்றும் 10335 அளவில் அடுத்தடுத்து உருவாகியிருக்கின்றன.

இந்த நிறுவனங்கள் மஹாராஷ்டிராவில் 2,83,588 அதிக அளவில் பதியப் பெற்றிருக்கின்றன.  அடுத்ததாக டில்லியில் 2,61,456 நிறுவனங்களும் மேற்கு வங்காளத்தில் 1,81,182 நிறுவனங்களும் பதியப் பெற்றிருக்கின்றன.

கடந்த மார்ச் 2014 ஆண்டு வரை பதியப் பெற்ற 13,94,819 நிறுவனங்களில் 9,52,433 மட்டுமே செயல்பட்டுகொண்டிருக்கின்றன.  இவற்றில் டில்லியில் செயல்பட்டு கொண்டிருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 1,89,441, மஹாராஷ்டிராவில் 1,88,768 உம், மேற்கு வங்காளத்தில் 1,34,292 நிறுவனங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. 

இந்த நிறுவனங்களில் 65% பத்து லட்சம் அல்லது அதற்கும் குறைவான மூலதனம் கொண்டுள்ளன.  இவற்றில் 2% மட்டுமே பத்து கோடிக்கும் அதிகமான மூலதனம் கொண்டுள்ளன.  மேலும் இவற்றில் 24 மாதங்களுக்கும் மேலாக தப்பி பிழைக்கும் நிறுவனங்கள் மிக குறைவு.

மேலும் கடந்த ஆண்டில் 216 அந்நிய நிறுவனங்கள் மட்டுமே பதிவுப் பெற்றிருக்கின்றன.  இந்த எண்ணிக்கைகள் மிகவும் வரவேற்க்க தகுந்தவை. 

Courtesy: The article was originally published by: Trak.in
Image Courtesy: Trak.in

0 comments:

Post a Comment