Friday 5 February 2010

Filled Under:

நினைவிருக்கும் வரை

கொஞ்ச தூரம் தான் நடந்திருப்பேன்


எதோ ஒன்றை மறந்ததை

மனது உணர்த்த

மறுபடியும் உன்னிடம் வந்தேன்


என்ன என்று நீ புன்னகைத்து

கொண்டே கேட்க

எதுவும் சொல்லாமல்

உன்னையே நான் பார்க்க


மறுபடியும் என்ன என்று நீ

காரணம் புரியாமல்கேட்க

'பேருந்துக்கு சில்லரை இல்லை' என்று

உன்னிடம் பணம் வாங்கி சென்றது

இன்றும் நினைவிருக்கிறது

கண்டிப்பாக கொடுத்துவிடுகிறேன்

0 comments:

Post a Comment