Friday, 5 February 2010

நினைவிருக்கும் வரை

கொஞ்ச தூரம் தான் நடந்திருப்பேன்


எதோ ஒன்றை மறந்ததை

மனது உணர்த்த

மறுபடியும் உன்னிடம் வந்தேன்


என்ன என்று நீ புன்னகைத்து

கொண்டே கேட்க

எதுவும் சொல்லாமல்

உன்னையே நான் பார்க்க


மறுபடியும் என்ன என்று நீ

காரணம் புரியாமல்கேட்க

'பேருந்துக்கு சில்லரை இல்லை' என்று

உன்னிடம் பணம் வாங்கி சென்றது

இன்றும் நினைவிருக்கிறது

கண்டிப்பாக கொடுத்துவிடுகிறேன்

0 comments:

Post a Comment